மனதில் கொள்




மனதில் கொள்

ஒருவரிடத்தில் அன்பு குறையும் பொழுது, அவரின் தவறுகள் பெரியதாக தெரியும்!!!

எண்ணம்போல் தான் வாழ்க்கை!! நல்ல எண்ணமே நல்ல வாழ்க்கையை தரும்!!!.

நடப்பதெல்லாம் நன்மைக்கே என நினைக்க வேண்டும்!!!

மற்றவர்களை திருத்துவது நம் வேலை அல்ல, நாம் சரியாக இருப்போம்!!! 

எப்பொழுதும் சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும்!!!

அதிகாலை விழிப்பும்,உடற்பயிற்சியும் ஆயுளை அதிகரிக்கும்!!!

அலட்சியமும் சோம்பலும் கூடாது!!! 

நம்மால்  முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவியையும் சந்தோசத்தையும் கொடுக்க வேண்டும்!!! 

கோபம் அறிவை அழிக்கும்!!!

எதுவும் நிரந்தரமில்லை, எல்லாம் சில காலம்தான்!!!

வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நாமாக இருப்போம்!!!

நம்மால் முடியாதது யாராலும் முடியாது!! யாராலும் முடியாதது நம்மால் முடியும்!!!

மனிதனால் மனதில் நினைத்தால், எதுவும் சாத்தியமே!!!

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்!! நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும்!!!

மற்றவர்கள் இல்லாத பொழுது, அவர்களை பற்றிய புறம் பேசுவது நல்ல பழக்கம் கிடையாது!!!

எதுவும் நிரந்தரமில்லாத உலகில், இருக்கும் வரை நாமும் சந்தோசமாக இருந்து மற்றவர்களையும் சந்தோஷ படுத்துவோம்!!!