தகடூர்ப் போர்

தகடூர்ப் போர் என்பது அதியமானுக்கும் சேரனுக்கும் இடையில் நடந்த போராகும். தகடூர்ப் போர் பற்றிய நூலே தகடூர் யாத்திரை ஆகும் இந்நூல் நமக்கு முழுவதும் கிடைக்கவில்லை. சிலபாக்களே கிடைத்துள்ளன. திருக்கோவலூர்ப் போரில் அதியமானுன் ஏற்பட்டப் போரில் தோற்ற காரி சேரன் பெருஞ்சேரல் இரும்பொறையிடம் தஞ்சமடைந்தான். இந்நிலையில் சேரமான் இரும்பொறையும், மலையமான் காரியும் தகடூர் மீது படையெடுத்தனர். இப்போரில் சேரன் அடைந்த பெருவெற்றியைப் பதிற்றுப்பத்து விரிவாகக் கூறுகிறது.
வெல்போர் ஆடவர் மறம் புரிந்து காக்கும்
வில்பயில் இறும்பில் தகடூர் நூறி

முதல் போர்

தகடூர் முற்றுகை அஞ்சி காலத்திலும் சில காலத்துக்குப் பின் அவன் மகன் காலத்திலும் நடந்ததாக கருதப்படுகிறது. முதல் முற்றுகையில் அஞ்சி இறந்தான். இதை ஔவையார் பாடியுள்ளார். சேரமான் வெற்றிபெற்றாலும் நாடுநகரங்களை அழிக்கவில்லை. தகடூர் நாட்டை தன்னாட்டுடன் இணைத்துக்கொள்ளவில்லை.

இரண்டாம் போர்

முதல் போர் நடந்து கொஞ்ச காலத்திற்குப் பின் நடந்த இரண்டாம் போரின் போது முதல் நாளில் கோட்டைக்கு வெளியே நடந்த போர் முடிந்துவிட்டது. தகடூர் படைகள் பேரழிவுடன் கோட்டைக்குள் பின் வாங்கின. சேரவீரர்கள் காவல் காட்டை அழித்து மறுநாள் கோட்டைக்குள் நுழைந்தனர். இந்த இரண்டாம் போரில் பொகுட்டெழினி இறக்கிறான். இவன் மறைவுடன் சங்ககால அதியமான்களின் ஆட்சி முடிவுற்றது எனலாம். பின்னர் அது சேரர்களின் நேரடி ஆட்சிக்குள் சில காலம் உட்பட்டிருக்கலாம் தகடூர் வந்து வெற்றி பெற்றதன் நினைவாக தகடூர் எறிந்த பெருஞ்சேரல் என்னும் பட்டத்தை சேரன் பெறுகிறான். தகடூர் அருகே இருந்த மலை சேர அரையன் மலை ஆகிறது அதுவே இன்று சேர்வராயன் மலை என்று வழங்குகிறது


திருக்கோவலூர்ப் போர்

திருக்கோவலூர்ப் போர் என்ற போர் சங்ககாலத்தில் அதியமான் நெடுமான் அஞ்சிக்கும்,மலையமான் திருமுடிக்காரிக்கும் இடையில் நடந்த போராகும். குலமரபுப் போராக இதைக் கருதலாம். தகடூரில் இருந்து தமிழகத்தின் உட்பகுதிக்குச் செல்லும் ஒரு பெருவழியில் திருக்கோவலூர் அமைந்துள்ளது.எனவே வணிகவழியினைக் கைப்பற்றும் காரணமாகவே இப்போர் நிகழ்ந்திருக்கலாம். இப்போரில் திருமுடிக்காரியின் திருக்கோவலூர் துகளாக்கப்பட்டது. இவ்வெற்றியினை ஔவையார் பெரிதும் புகழ்ந்து பாடியுள்ளார்.
..... .... ..... ...... இன்றும் பரணன் பாடினன் மற்கொல் மற்றுநீ
முரண்மிகு கோவலூர் நூறி நின்
அரண்அடு திகிரி ஏந்திய தோளே

இப்பாடலில் குறிப்பிடப்படும் பரணர் பாடிய பாடல் சங்கத் தொகுப்பில் இல்லை. 

கொல்லிப் போர்

கொல்லிப் போர் என்பது கொல்லிமலையில் நடந்த போராகும் இப்போர் ஓரிக்கும் காரிக்கும் நடந்தது இப்போரில் காரி சேரமான் சார்பாக போரிட்டதாக கருதப்படுகிறது. இப்போரில் வல்வில் ஓரியைக் கொன்று அந்த மலையை சேரமானுக்கு காரி வழங்கினான். ஓரி இறந்தபின்னும் கொல்லிமலையில் பெரும் போர் ஒன்று நடந்து என்பதை
கொல்லிக் கூற்றத்து நீர்கூர் மீமிசைப் பல்வேல் தானை அதிகமானொடு
இருபெரு வேந்தரையும் உடனிலை வென்று
முரசும் குடையுங் கலனுங் கொண்டு

என்று பதிற்றுப்பத்து தெரிவிக்கிறது. இப்போரில் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையை எதிர்த்து அதியமான் நெடுமானஞ்சியும் இரு பெரும் வேந்தர்களாகிய சோழனும்,பாண்டியனும் இணைந்து போரிட்டனர். பெருஞ்சேரல் இரும்பொறை இம்மூவரையும் வென்று அவர்தம் முரசு,குடை,கலன் ஆகியவற்றைக் கைப்பற்றினான்.

நோபெல் பரிசு

நோபெல் பரிசு அல்லது நோபல் பரிசு என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு ஆகும். அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் சில நிறுவனங்களுக்கும் வழங்கப்படுவது உண்டு. மார்ச் 2005 வரை 770 நோபெல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், சிலர் இந்தப் பரிசைப் பெற்றுக்கொள்ள மறுத்ததும் உண்டு. இது வேதியியலாளர் ஆல்ஃபிரட் நோபெல் என்பவரால் 1895ல் தொடங்கப்பட்டது. முதல் பரிசு 1901 ல் வழங்கப்பட்டது. சில ஆண்டுகள் ஒரு பரிசு கூட அறிவிக்கப்படாமல் போனதும் உண்டு. எனினும், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது இந்தப் பரிசு அறிவிக்கப்படும். நோபெல் பரிசு, திரும்பப் பெறத்தக்கதல்ல.இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம் அல்லது உடலியங்கியல் மற்றும் அமைதி ஆகியவையே ஆல்ஃபிரட் நோபெல் அவர்களின் உயிலின்படி ஏற்படுத்தப்பட்ட பரிசுகளாகும்.