நாலடியார்

கூடா நட்பு
 

பொருட்பால்
24. கூடாநட்பு
237முற்றற் சிறுமந்தி முற்பட்ட தந்தையை
நெற்றுக்கண் டன்ன விரலான் ஞெமிர்த்திட்டுக்
குற்றிப் பறிக்கும் மலைநாட! இன்னாதே
ஒற்றுமை கொள்ளாதார் நட்பு.
(பொ-ள்.) சிறுமந்தி முற்பட்டதந்தையை நெற்றுக் கண்டன்ன விரலால் குற்றிஞெமிர்த்திட்டு முற்றல் பறிக்கும் மலைநாட -இளங்குரங்கு, பயற்றங்காயின் நெற்றைக்கண்டாற்போன்ற தன் விரல்களால் தன் எதிர்வந்ததந்தையின் கையைக் குத்தி விரியச்செய்து அதுவைத்திருந்த கனியைப் பறித்துக் கொள்கின்றமலைகளையுடைய நாடனே!, ஒற்றுமை கொள்ளாதார் நட்புஇன்னாது - அகங்கலந்த நேயங்கொள்ளாதாரது நட்புதுன்பமுடையதாகும்.
(க-து.) உள்ளம் ஒன்றுபடாதகூடாநட்பினரோடு நேயங்கொள்ளலாகாது.
(வி-ம்.) முற்றல் - செங்காய் -சிறுமந்தியென்றது ஈண்டுக் குரங்கின் குட்டியை ;மந்தி, பெட்டையை உணர்த்தாமற் பொதுவினின்றது.தந்தை : பொதுப்பெயர். ஞெமிர்தல் புறத்தில்மட்டுங் கலந்து அகங்கலவாத வேறு பாட்டியல்பைப்புலப்படுத்தும் பொருட்டு ‘ஒற்றுமை கொள்ளாதா'ரென்றார். பரத்தலாதலின் ஈண்டு விரித்தலெனப்பட்டது.1 "வான் ஞெமிர்ந்து"என்பது மதுரைக் காஞ்சி.