அலைபேசி எண் தெரியாமல் நண்பரிடம் பேச வேண்டுமா...!

அலைபேசி எண் தெரியாமல் தெரியாமல் நண்பரிடம்  பேச வேண்டுமா...!




உங்களுடைய நண்பருக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசலாம். உங்களது அலைபேசி எண் தெரியாமல் அதாவது நீங்கள் தொடர்பு கொள்ளும் நபருக்கு யாருடைய எண் என தெரியாது . அதுவும் இலவசமாகஎப்படி என்கிறிர்களா?https://ievaphone.com/ என்ற இணைய தளத்தில் இருந்து தொடர்பு கொள்ளலாம். பதிவு செய்ய வேணாம்(NO REGISTRATION)..ஆண்ட்ராய்டு மென்பொருளும் பயன்படுத்திக் கொள்ளலாம்.country code உடன் மொபைல் எண்ணை பயன்படுத்தலாம். உதாரணமாக இந்தியாவிற்கு +91  மொபைல் (country code + mobile no ) என்னை கொடுத்து கால் செய்து பாருங்கள்..

ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரை பயன்படுத்தியதால் புற்று நோய்

ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரை பயன்படுத்தியதால் புற்று நோய்: ரூ.493 கோடி நஷ்ட ஈடு வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

அமெரிக்காவில் உள்ள மிசவுரி மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜாக்குலின் பாக்ஸ் (வயது 62) இவர் கடந்த 35 ஆண்டுகளாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான பவுடரையும், ஷவர் டூ ஷவர் பவுடரையும் பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் அவருக்கு கர்பப்பை புற்றுநோய் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் ஜாக்குலின் பாக்ஸ் இறந்தார்.

ஜான்சன் - ஜான்சன் நிறுவனத்தின் பொருள்களைப் பயன்படுத்தியதாலே அவருக்கு கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்பட்டதாக கூறிய அவரது குடும்பத்தினர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜான்சன்-ஜான்சன் நிறுவனம் அதனுடைய உற்பத்தி பொருளான முகப்பவுடரில் புற்று நோயை ஏற்படுத்தக்கூடிய ரசாயன பொருட்கள் இருப்பதை நுகர்வோருக்கு தெரிவிக்க தவறிவிட்டது என தெரிவித்தனர்.

மேலும், பாதிக்கப்பட்ட ஜாக்குலின் குடும்பத்தாருக்கு, 72 மில்லியன் அமெரிக்க டாலர் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டனர். இதன் இந்திய மதிப்பு ரூ. 493.50 கோடி ஆகும். இது சம்பந்தமான சுமார் 1000 வழக்குகள் மிசவுரி மாநில நீதிமன்றத்திலும், சுமார் 200 வழக்குகள் நியூஜெர்ஸி கோர்ட்டிலும் நிலுவையில் உள்ளன.

ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் பவுடர்களில் 'டால்கம்' பயன்படுத்தப்படுகிறது. இந்த டால்கம் பொருளால் புற்றுநோய் ஏற்படுகிறது என தெரியவந்ததையடுத்து, அமெரிக்காவில் பெரும்பாலான அழகுசாதனப் பொருள்களை தயாரிக்கும் நிறுவனங்கள் டால்கம் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டன. எனினும், ஜான்சன் - ஜான்சன் நிறுவனம் தொடர்ந்து டால்கமை பயன்படுத்தி வந்துள்ளது. இந்நிலையில், ஜான்சன் - ஜான்சன் பவுடரை பயன்படுத்த இந்திய பெண்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.

139 கால் பண்ணுங்க! ரயில் டிக்கெட் கேன்சல் பண்ணுங்க :

139 கால் பண்ணுங்க! ரயில் டிக்கெட் கேன்சல் பண்ணுங்க : புதிய வசதி அறிமுகம்


ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்கள், தேவையில்லை என்றால் தங்கள் மொபைல் மூலமே அதை ரத்து செய்யலாம் என்று புதிய வசதியை ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
salemtamil.blogspot.com
 
 
இதற்கு முன்பு ரயிலில் பயணம் செய்தவர்கள், அதை ரத்து செய்ய விரும்பினால் ரயில் நிலையங்களுக்கு செல்ல வேண்டும். அல்லது இணையதளத்தில் ரத்து செய்யவேண்டும்.
 
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வசதிபடி, உங்கள் பயணத்தை ரத்து செய்வதற்கு உங்கள் மொபைலில் இருந்து 139 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால், உங்களுக்கு ஒருமுறை பயன்படுத்தக் கூடிய ஒரு கடவுச்சொல்(பாஸ்வேர்டு) அளிக்கப்படும். அதை பயன்படுத்தி நீங்கள் உங்கள் டிக்கெட்டை ரத்து செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.