சர்க்காரியா ...



வீராணம் திட்டத்தின் மொத்த திட்ட மதிப்பு, 16 கோடி.

ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ஊழலைப்பார்த்து விட்டு 26 கோடி ரூபாய் என்பது ஒரு பெரியதொகையாக தோன்றாமல் போகலாம்.

இத்திட்டம்மதிப்பீடு செய்யப் பட்ட போது, சென்னை அண்ணாசாலையில் வீட்டோடு சேர்த்து, 1240 சதுர அடி இடத்தைமாறன் ரூ.45,000/- க்கு வாங்கியுள்ளார் என்பதை வைத்து அந்தக் காலத்து பண மதிப்பை புரிந்துகொள்ளுங்கள்.

தொழில் அதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகளின்நெருங்கிய தொடர்பால், நஷ்டப் படுவது என்றுமேமக்கள் பணமாகத்தான் இருக்கிறது.

முரசொலி மாறனுக்கு சென்னை பச்சையப்பன்கல்லூரியை நடத்தும், பச்சையப்பன் அறக்கட்டளையில்உறுப்பினராக வேண்டுடமென விருப்பம். பச்சையப்பன்அறக்கட்டளையில் உறுப்பினராவது. பச்சையப்பன்ட்ரஸ்ட் என்பது பாரம்பரியமிக்க ஒரு ட்ரஸ்டாகும். இந்தட்ரஸ்டில் உறுப்பினர் ஆவது சமுதாயத்தில் மிகப் பெரியஅந்தஸ்தை பெற்றுக் கொடுக்கும்.

அதனால் எப்படியாவது இந்த அறக்கட்டளையில்உறுப்பினராக வேண்டுமென மாறன் விரும்பினார். 1970ல் பச்சையப்பன் அறக்கட்டளையில் உறுப்பினராகஇருந்த சத்யநாராயணா பிரதர்ஸ் நிறுவனத்தின்உரிமையாளர் சத்யநாராயணாவின் மருமகன்புருஷோத்தம் என்பவரோடு, மாறன் “வாங்க பழகலாம்”என்று பழகத் தொடங்குகிறார்.

புருஷோத்தமுக்கு மாறனின் நட்பு என்ன கசக்கவாசெய்யும் ? இவர் தொழில் அதிபர். மாறன்,முதலமைச்சரின் மருமகன். அவரும், நெருங்கிப்பழகுகிறார்.
1970 ஜனவரியில், பச்சையப்பன் ட்ரஸ்ட்அறங்காவலராக இருந்த எம்ஏஎம்.முத்தையா செட்டியார்இறக்கிறார். அவர் இறந்தவுடன், மாறன், ‘அண்ணன்எப்போ சாவான், திண்ணை எப்போ காலியாகும்’ என்றுஅந்தக் காலியிடத்தில் தான் உறுப்பினராக வேண்டும்என்று தனது விருப்பத்தை புருஷோத்தமிடம்தெரிவிக்கிறார். முதலமைச்சரின் மருமகனை எதிர்த்து,வேறு யாரும் தேர்ந்தெடுக்கப் பட்டு விட முடியுமா என்ன?

மாறனின் பெயரை புருஷோத்தம் முன்மொழிந்து மாறன்பச்சையப்பன் அறக்கட்டளையின் உறுப்பினராகிறார்.பிறகு சிறிது நாட்களிலேயே, அந்த அறக்கட்டளையின்தலைவர் பதவியையும் கைப்பற்றுகிறார் மாறன்.

தலைவர் பதவியை மாறனுக்கு விட்டுக் கொடுத்தபுருஷோத்தம் கைமாறாக எதுவுமே எதிர்ப்பார்க்கமாட்டாரா ? எதிர்ப்பார்த்தார். மாறனிடம், தங்கள்நிறுவனமான சத்தியநாராயணா பிரதர்ஸூக்கு, வீராணம்குழாய்கள் அமைக்கும் உத்தரவை பெற்றுத் தருமாறுகூறுகிறார்.

மாறன், “நான் காண்ட்ராக்ட் வாங்கித் தர்றேன்… பதிலுக்குநீங்கள் என்ன தருவீர்கள்” என்று கேட்கிறார். என்னவேண்டும் என்று கேட்டதற்கு, ஒப்பந்தத்தில் இரண்டரைசதவிகிதத்தை கமிஷனாகத் தர வேண்டும் என்று மாறன்கேட்கிறார்.

உடனே கணக்குப் போடுகிறார்கள். மொத்த திட்டச்செலவு 16 கோடி. அதில் இரண்டரை சதவிகிதம் என்பது40 லட்சம். இந்தத் தொகையை கொடுத்து விடுங்கள்என்று மாறன் கூறவும், புருஷோத்தமும் ஒப்புக்கொள்கிறார்.

பூர்வாங்கப் பேச்சுவார்த்தை முடிந்து விட்டதல்லவா ?அடுத்த கட்டத்திற்குப் போகிறார்கள். சத்யநாராயணாபிரதர்ஸ், நிறுவனத்திற்கு, பூர்வாங்கமாக ஒப்பந்தம்வழங்கி ஒரு உத்தரவு வேண்டுமென்று கேட்கிறார்கள்.மாறன் மட்டும் சளைத்தவரா என்ன ? சரி உங்களுக்குஅது போல ஒரு உத்தரவு வழங்கப் படும். “அதுக்குமுன்னால பேசிய தொகையை குடுங்க” என்கிறார் மாறன்.

புருஷோத்தமுக்கு வேறு வழி…. தனது மாமனார்சத்தியநாராயணா ரெட்டியிடம் இந்தத் தகவலைதெரிவிக்கிறார். அவர், “இவ்வளவு பெரிய தொகையைமொத்தமாக தர இயலாது. அதனால் கொஞ்சம்குறைத்துக் கொள்ளச் சொல்லி பேசு” என்று கூறுகிறார்.

மாறனிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. மொத்தமாக தரஇயலாது. முதலில் 10 அல்லது 15 லட்சம் வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார். மாறனோ, “நான்ஒன்றும் பெரிய தொகையை கேட்டு விடவில். மிககுறைந்த தொகையாகிய 40 லட்சத்தைத் தான்கேட்டுள்ளேன். குடுத்தா குடுங்க…. இல்லன்னா எவ்ளோபேரு, ரெடியா இருக்காங்க தெரியுமா ? “ என்றுகூறுகிறார்.

ஒரு வழியாக, மீதத் தொகைகளை பின்னால் தருவதுஎன்றும், முதல் தவணையாக அட்வான்ஸாக ஒரு தொகைதரப்பட வேண்டும் என்றும் முடிவெடுக்கப் படுகிறது.

ஒப்பந்தப் புள்ளிகள் முடிவடைவதற்கு முன்பாகவே,பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்நிலையிலேயே, புருஷோத்தமும், அவர் மாமனார்சத்யநாராயணா ரெட்டியும், மாறனோடு சேர்ந்துகருணாநிதியின் இருப்பிடத்திற்குச் சென்று, கரன்சிநோட்டுக்களாக, 5 லட்ச ரூபாயை வழங்குகிறார்கள்.

இதில் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும்.பேசுவதெல்லாம், தமிழ் எங்கள் மூச்சு, இதயத்தின் வீச்சு,உயிரே போச்சு என்றெல்லாம் பேசுவபர்கள், துட்டுவாங்கும் விவகாரத்தில் மட்டும், தெலுங்கு ரெட்டியை தேர்ந்தெடுக்கிறார்கள் பார்த்தீர்களா…. ? பணத்துக்கு நிறமோ, மொழியோ ஏது…. ?

முதல் தவணை தொகை கொடுக்கப் பட்டவுடன்,சத்யநாராயணா பிரதர்ஸ் நிறுவனத்துக்கு வரிசையாகஅரசுப் பணம் வழங்கப் படுகிறது. அதையொட்டி,பேசிய தொகையை தருமாறு, நெருக்கடி கொடுக்கப்படுகிறது.

இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக அரசிடமிருந்துசத்யநாராயணா பிரதர்ஸுக்கு அரசு வழங்கிய மொத்தத்தொகை 3.9 கோடி. புருஷோத்தம், கருணாநிதிக்கு,நேரடியாகவும், மாறன் மூலமாகவும் வழங்கிய தொகை32 லட்சம்.

இந்த தொகையை இவர் கருப்புப் பணத்திலிருந்துவழங்கியுள்ளார், அதனால், இவரும், இக்குற்றத்திற்குஉடந்தையானவர், இவர் வாதத்தை ஏற்றுக் கொள்ளமுடியாது என்றெல்லாம் கருணாநிதி தரப்பில் வாதாடப்பட்டது. ஆனால், புருஷோத்தமன், தேதி வாரியாக,எந்தெந்த நாட்களில், வங்கியிலிருந்து, எவ்வளவுதொகை எடுக்கப்பட்டு, கருணாநிதியிடம் கொடுக்கப்பட்டது என்ற விபரங்களை கமிஷன் முன்பு தாக்கல்செய்தார்.

புருஷோத்தம் தனது சாட்சியத்தில், ஒரு முறைகருணாநிதியிடம் நேரடியாக பணத்தை எடுத்துச் சென்றுகொடுத்ததை இப்படி விவரிக்கிறார்.

“கரன்ஸி நோட்டுக்களாக, 6 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு மாறன் வீட்டுக்குச் சென்றோம். மாறன்கருணாநிதி வீட்டிக்குக் கூட்டிச்சென்றார். பணம்அடங்கிய தோல் பெட்டியை மேசை மீது கருணாநிதிமுன்னிலையில் வைத்தேன். கருணாநிதி பணத்தைஎடுத்துக் கொண்டு காலிப் பெட்டியை திருப்பிக்கொடுத்தார்“

இந்த ஒப்பந்தம் குறித்து பேச்சு வார்த்தைகள் நடந்துகொண்டிருந்த போது, சிவராமன் என்றபொதுப்பணித்துறை அதிகாரி, தாராப்பூர் மற்றும்,சத்யநாராயணா பிரதர்ஸ் ஆகிய இரு நிறுவனங்களின்ஒப்பந்தப் புள்ளிகளையும் ஒப்பிட்டுப் பார்த்து,முக்கியமான ஒரு விஷயத்தைச் சொன்னார்.

குழாய்கள்அமைக்கும் போது, அவற்றை சோதனை செய்து பார்க்க, 12 கோடி காலன் தண்ணீர் தேவைப்படும் என்றும் அந்தத்தண்ணீருக்கு ஆகும் செலவாக அரசு, தங்களுக்கு 96லட்சம் வேண்டுமென்றும் கேட்டிருந்தனர்.

தாராப்பூர்நிறுவனமோ, இது போன்ற ஏற்பாட்டிற்கு ஆகும்செலவை அவர்களே ஏற்றுக் கொள்வதாகதெரிவித்திருந்தனர். ஆனால், இதையெல்லாம் யார்காதில் வாங்குவது…. ? இந்த ஆட்சேபணையையும் மீறி,சத்யநாராயணா நிறுவனத்துக்கே வேலை ஆணைவழங்கப் பட்டது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய கணக்காயர் (சிஏஜி)அறிக்கைதான் முதலில், ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம்கோடி நஷ்டம் என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டியது.

அதைப் போலவே, மாநில கணக்காயர் குழு, வீராணம்திட்டத்தை முழுமையாக ஆராய்ந்து, மொத்தம்எவ்வளவு மக்கள் பணம் விரயமாகியுள்ளது என்று ஒருஅறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையின் படி,கூடுதல் நிதிச் சலுகைகள், மிகையாக கொடுக்கப் பட்டதொகை, தவிர்க்கத் தக்க செலவு, தரக்குறைவானகுழாய்களால் ஏற்பட்ட நஷ்டம், தரக்குறைவானசிமெண்டு பயன்படுத்தியது, சோதனையிடப்படாதகுழாய்களுக்கு சோதனை செய்ததாக வழங்கப் பட்டதொகை, மேற்பார்வை பணிக்கான கூடுதல் செலவு என்றுமொத்தத்தில் 7 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு என்றுஅறிக்கை சமர்ப்பித்தது.

இந்த அறிக்கை மாநில கணக்காயர் சமர்ப்பித்ததால்,அவரை தமிழின விரோதி, ஆரிய கைக்கூலிஎன்றெல்லாம் கருணாநிதியால் ஏச முடியவில்லை.

இந்த ஊழலில், கருணாநிதி மட்டும் தான் பணம்வாங்கினாரா மாறன் வாங்கவேயில்லையா என்ற கேள்விஎழும். மாமா வாங்கினால் என்ன மருமகன் வாங்கினால்என்ன.. இருந்தாலும், அவர் பங்குக்கு ஏதாவது செய்யவேண்டாமா ?

முரசொலி கட்டிடம் கட்டும் பணி, சத்யநாராயணாபிரதர்ஸின் துணை நிறுவனமான மஹாலட்சுமிகன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்திடம் ஒப்படைக்கப் படுகிறது.அதற்கான தொகையை மாறன் கொடுத்தார் என்றுஅவசரப்பட்டு முடிவெடுத்து விடாதீர்கள். தங்களிடம்சிக்கியவர்களை பட்டாபட்டி அண்டர்வேரோடுஅனுப்புவதில் இவர்கள் கைதேர்ந்தவர்கள்.

வேலையையும், கட்டுமானப் பொருட்களையும்,இலவசமாகவே மாறன் பெற்றார். இது குறித்து பதில்அளித்த மாறன், மஹாலட்சுமி கன்ஷ்ட்ரக்ஷன் நிறுவனம்,சத்யநாராயணா நிறுவனத்தின் துணை நிறுவனம் என்றவிபரம் தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்…..ஊழலின் சாட்சியாக முரசொலிக் கட்டிடம் இன்றும்நிற்கிறது.

காலம் செல்லச் செல்ல, சத்யநாராயணா பிரதர்ஸ்தங்களுக்கு வழங்கப் பட்ட வேலையை செய்துமுடிக்காமல் பணிகள் அப்படியே நின்று போகின்றன.அரைகுறையாக செய்யப் பட்ட பணிகளால்சாலையெங்கும் குழாய்கள் கிடந்தன.

இது குறித்து, கருணாநிதியின் முதன்மைச் செயலாளராகஇருந்த ஆர்.நாகராஜன், தனது சாட்சியத்தில், “1975ம்ஆண்டு அக்டோபர் திங்களில் புருஷோத்தம் என்னைவந்து பார்த்தார். அப்போது நான் மட்டுமே அங்குஇருந்தேன். இந்த நிதி நெருக்கடி எப்படி ஏற்பட்டதுஎன்று கேட்டேன். அவர் சொல்ல தயங்கினார். நான்வற்புறுத்திக் கேட்டேன். வீராணம் திட்டத்தை எங்கள்நிறுவனத்திற்கு வழங்குவதற்காக முதலமைச்சர்கருணாநிதியுடன் முன்னரே செய்து கொண்டஏற்பாட்டின் படி, கமிஷன் தொகையாக 29 லட்சம்தரப்பட்டுள்ளது.

இவ்வளவு பெருந்தொகையைகொடுத்ததால், தம்முடைய தொழில் புழக்கத்துக்காகஇருந்த நடைமுறை மூலதனம் அனைத்தும் முழுவதுமாகதீர்ந்து போய் விட்டது“ என்று சாட்சியம் அளித்துள்ளார்.

ஆக்கவும், அழிக்கவும் வல்லதுதானே அரசு ?

போட்ட திட்டம் வேலை நிறைவேறவில்லை.சத்யநாராயணா பிரதர்ஸ் நிறுவனம் ஏறக்குறையநொடித்துப் போய் விட்டது. என்ன செய்வது…. ? ஒருநபர் இறந்து விட்டால் பிரேதப் பரிசோதனை செய்து,இரங்கல் கூட்டம் போட வேண்டாமா…. ? அப்புறம்இறந்தவருக்கு என்ன மரியாதை ?

5.6.1974 அன்று, திருவாளர்கள் சத்யநாராயணா பிரதர்ஸ்நிறுவனம் இத்திட்டத்தை நிறைவேற்றும் பணியில்ஆற்றிய சாதனைகள் குறித்து கருணாநிதி தலைமையில்ஒரு கூட்டம் கூட்டப் படுகிறது.

அக்கூட்டத்தில் சத்யநாராயணா நிறுவனம் குறித்துகீழ்கண்ட முடிவுகள் எடுக்கப் படுகின்றன.

“சத்யநாராயணா பிரதர்ஸ் நிறுவனத்துக்குதேவைப்படுகின்ற நிர்வாக மற்றும் வல்லுனர் அமைப்புஇல்லை. கால அட்டவணைப் படி தொழிற்சாலையைநடத்துவதற்கு போதுமான நிதி வசதிகளும் இல்லை.இப்படிப் பட்ட மாபெரும் திட்டத்நிறைவேற்றுவதற்குரிய திறமை, திருவாளர்சத்தியநாராயணா நிறுவனத்திடம் உண்டு எனக் கூறிஅவர்கள் திறமை மீது அதிக அளவில் நம்பிக்கைவைத்து மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது.“

கருணாநிதி என்று பொதுப்பணித் துறைஅமைச்சரானாரோ, அந்த நாள் முதலாகவே ஊழலில்ஈடுபடத் தொடங்கினார். கருணாநிதி முரசொலி மாறன்என்று தமிழகத்தை கொள்ளையடித்த மிகப் பெரும்கொள்ளைக்காரர்களாகவே கருணாநிதியின் குடும்பம்உருவாகியது. ஆக்டோபஸ் போல வளர்ந்து இன்றுதமிழகத்தையே சூறையாடிக் கொண்டிருக்கிறது. முரசொலி மாறன் பெற்றெடுத்த தவப்புதல்வர்கள், அவர்கள் பங்குக்கு,  தமிழகத்தை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இத்தனை ஊழல்களையும் செய்து விட்டு, அதுவெளிவந்து அம்பலமான பின்னரும், “தமிழர்களே…தமிழர்களே… நீங்கள் என்னை கடலிலே தூக்கிப்போட்டாலும்” என்று தயக்கமின்றிப் பேசுகிறார் கருணாநிதி.

இவர்களிடம் மீண்டும் அதிகாரம் வழங்கப்பட்டால் ?

கணக்கதிகாரம்...

 இன்று ஓர் சிறப்பு தகவல் இதோ :-    
தமிழன் படைத்த கணக்கதிகாரம் நூலின் சிறப்பு:

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது என்பதை உங்களால் கூற முடியுமா ?

முடியும் என்கிறது நம் தமிழ் செய்யுள்.

"கணக்கதிகாரம்" கொறுக்கையூரைச் சேர்ந்த காரி நாயனார் என்பவர் எழுதிய ஒரு தமிழ்க் கணித நூல்

"கீற்றெண்ணி முத்தித்துத் கழாறினால் மாறி
வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்ததிலே
பாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும்
பூசணிக்காய் தோறும் புகல்"

ஒரு பூசணிக்காயின் கீற்றுகளை எண்ணிக்கொண்டு அதை மூன்று, ஆறு, ஐந்து இவற்றால் பெருக்கி வரும் விடையை பாதியாக்கி மீண்டும் மூன்றால் பெருக்கினால் வருவது விதைகளின் எண்ணிக்கையாகும்.

ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிக்கையை "அ" என்க.
பாடலின் படி அதை 3,6,5 ஆகியவற்றால் பெருக்க கிடைப்பது "90அ" ஆகும் அதை பாதியாக்கினால் கிடைப்பது "45அ" ஆகும். அதை மீண்டும் மூன்றால் பெருக்க கிடைப்பது "135அ" ஆகும்.

ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிகையை அ=6 ஆறு எனக்கொண்டால் (135 * 6 = 810) 135 ஐ ஆறால் பெருக்க கிடைப்பது 810 ஆகும். எனவே பூசணியில் உள்ள விதைகளின் எண்ணிக்கை 810 ஆகும்.

ஓர் பலாப்பழத்தை பிளக்காமல் அதில் எத்தனை சுளைகள் இருக்கிறது என்பதை உங்களால் கூற முடியுமா ?

சங்க காலத்திலேயே எழுதப்பட்ட கணக்கதிகாரம் என்ற நூலில் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையை அறிந்துகொள்ளும் வழிமுறை மிக எளிமையாகக் கூறப்பட்டுள்ளது.

"பலாவின் சுளையறிய வேண்டுதிலேல் ஆல்கு
சிறுமுள்ளுக் காம்பரு எண்ணி - வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தனுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை."

- கணக்கதிகாரம்

விளக்கம் :
பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணி ஆறாலே பெருக்கி ஐந்தால் வகுக்க பலாப்பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறியலாம்.
  ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையையும் உங்களால் கூற முடியுமா ?

வாழ்க்கை எப்படி இருந்தது...

1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது...


வாருங்கள் கொஞ்சம் ரிவைன்ட் செய்து பார்ப்போம்...
காலை எழுந்ததும் பசும்பால் வாங்க அப்பா வரிசையில் நின்றிருந்தார்.
.
வாங்கி வந்த தண்ணீர் கலக்காத பாலில், அம்மா டீ போட்டு கொண்டு வந்தார். குடும்பத்துடன் அமர்ந்து டீ குடிப்பதை கூட அவரவர் முகத்தை பார்த்து ரசித்து குடித்தோம்.
.
ஆர்ப்பாட்டமே இல்லாமல் நாம் அனைவரும் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு கூட நடந்தே சென்றோம்...
.
ஆசிரியரின் மீது மரியாதையும் பயமும் இருந்ததே தவிர ஒரு நாளும் ஆசிரியரை தரக்குறைவாகவோ, இழிவாகவோ ஒரு மாணவனும் நினைத்ததில்லை...
.
பள்ளி முடித்து வீட்டுக்கு வந்ததுமே, பையை தூக்கி போட்டுவிட்டு தெருவில் கும்பலாக விளையாடினோம்...
.
விளையாட்டில் கூட ஆங்கிலம் கலக்காத தமிழ் நம் அனைவர் நாவிலும் வீரியமாக தொற்றியிருந்தது...
.
மாலை 4 மணிக்கு மேல் நம் அக்கா தங்கைகளுக்கு அம்மா அழகாக சடை போட்டுவிட்டார்...
.
உதிரியாக வாங்கிய பூக்களை (மல்லி மற்றும் பிச்சிப்பூ) வாழை நாறால் சிறுசிறுக கட்டி, அதை அக்கா தங்கைக்கு அம்மாவே தன் கையால் குத்தி அழகு பார்த்தார்...
.
மாலையில் நம் தாத்தாவும் அப்பாவும் ஒன்றாக அமர்ந்து தூர்தர்ஷனில் செய்திகள் பார்த்தார்கள்...
.
வெள்ளிக்கிழமையன்று, குறைந்தபட்சம் 10பேராவது ஒன்றாக அமர்ந்து இரவு ஒளியும் ஒலியும் பார்த்தோம்...
.
சனிக்கிழமைகளில் சக்திமான் பார்க்க காய்ச்சலென பொய் சொல்லி பள்ளிகளுக்கு விடுமுறை எடுத்தோம்...
.
அம்மாக்களுக்கு அன்று சீரியல் என்றாலே என்னவென்று பொருள் தெரியாமல், வீட்டு வாசலில் அமர்ந்து நம் விளையாடுவதை வேடிக்கை பார்த்தனர்...
.
ஊர வைத்த அரிசியை ஆட்டுக்கல்லில் போட்டு அம்மா இட்லிக்கு மாவை அரைத்தார்...
.
அதிகபட்ச அப்பாக்களுக்கு சிகரெட் மற்றும் குடிப்பழக்கம் இல்லாமல் இருந்தது...
.
ஞாயிற்றுகிழமை மதியம், தூர்தர்ஷன் மாநில மொழி திரைப்படத்தில் தமிழ் படம் வராதா என ஏங்கி இருக்கிறோம்...
.
ஞாயிறு மாலை டிவியில் திரைப்படம் பார்ப்பதால் தெருவில் ஈ காக்கைகள் கூட பார்க்க முடியாத சூழ்நிலை இருந்தது...
.
ஞாயிறு பார்த்த படத்தை பற்றிய விவாதம் திங்களன்று பள்ளி நண்பர்களிடத்தில் தொடர்ந்துகொண்டே இருந்தது...
.
உறவினர்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களுக்காக வாங்கிய குளிர்பானத்தில் நமக்கும் கொஞ்சம் தருவார்கள் என காத்து கொண்டிருந்தோம்...
.
தீபாவளி ரம்ஜான் என பண்டிகை காலங்களில் புதுத்துணி எடுக்க குடும்பத்துன் ஒன்றாக சேர்ந்து போனோம்... அம்மா அப்பா வாங்கி கொடுத்த துணியை மட்டுமே அணிந்து அழகு பார்த்தோம்...
.
ஒரு தெருவிற்கு இரண்டு பேர் காதலிப்பதே அபூர்வமாக இருந்தது... அன்றைய காதலர்கள் காதலில் தோற்றால் தற்கொலை செய்துகொண்டனர்...
.
பண்டிகை காலம் வந்தால் வாழ்த்து அட்டை (க்ரிட்டிங் கார்டு) வாங்க கடைகளில் அலை மோதினோம்...
.
10வது மற்றும் 12வது ரிசல்ட் பார்க்க தினத்தந்தி வாசலில் தவம் கிடந்தோம்...
.
யாராவது செல்போன் (சாதாரண 1100)  வைத்திருந்தால் அதை ஆச்சரியமாக வாங்கி தொட்டு பார்த்தோம்...
.
நம் அக்காவும் தங்கையும் குதிரை வால் சடை போட்டு வீதிகளில் வலம் வந்தனர்...
.
பணக்கார வீட்டு கன்னிப் பெண்கள் BSA SLR சைக்கிள் வைத்திருந்தார்கள்...
.
10ல் குறைந்தபட்ச 8 வீட்டில் உள்ள குழந்தைகளிடம் உண்டியல் பழக்கம் இருந்தது...
.
போன கரண்ட் திரும்ப வந்ததும் கை தட்டி ஆரவாரப்படுத்தினோம்...
.
வருடத்திற்கு ஒருமுறை குடும்பத்துடன்  சினிமாவுக்கு போவதே பெரிய விஷயமாக இருந்தது...
.
வீட்டில் யாருக்காவது திருமணம் நடந்தால், கிடைக்காத எதோ ஒரு அபூர்வ பொருள் கிடைத்தது போல் மிகுந்த மகிழ்ச்சிடன் காணப்பட்டோம்...
.
ஊருக்கே ஒருவரோ இருவரோதான் வெளிநாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தார்...
.
10ல் 8 கன்னிப் பெண்களின் தார்மீக ஆடை தாவணியாக இருந்தது...
.
10ல் 8 ஆண்களிடத்தில் வேஷ்டி கட்டும் பழக்கம் இருந்தது...
.
பள்ளி விடுமுறை காலத்தை வெளியூரில் உள்ள தாத்தா, மாமா, சித்தப்பா, பெரியப்பா வீட்டிற்கு சென்று விழா போல கொண்டாடினோம்...
.
கிணற்றில் குளிக்கும் பழக்கம் இருந்தது...
.
பலருக்கு நீச்சல் தெரிந்திருந்தது...
.
அடிக்கடி காய்ச்சல், தலைவலி வந்தது கிடையாது...
.
பலசரக்கு கடைகளுக்கு போகும்போது மஞ்சள் பைகளையே உபயோகித்தோம்...
.
தரையில்தான் அதிகபட்சம் உறங்கினோம்... பாயை தவிர வேறொன்றை கண்டதில்லை...
.
12 மணி நேரம் உழைத்தாலும் உடலில் வியர்வை நாற்றம் வந்தது கிடையாது...
.
இவை அனைத்தையும் விட அப்பா அம்மா சொல்படி கேட்டு அனைவரும் நடந்தோம்

உலகிலுள்ள அத்துனை வசதிகளும் அருகிலேயே இருந்தால் கூட, இன்று இவற்றில் ஒன்று கூட  சாத்தியமில்லை... பழைய பொக்கிஷங்கள் ஒன்று கூட கிடைக்கப் போவதில்லை... அன்றைய வாழ்நாள்தான் சொர்க்கம்...

டெங்குதோலுரிக்கும்கட்டுரை !

உண்மையை உரக்க சொல்வோம்
 #டெங்குதோலுரிக்கும்கட்டுரை !
----------------------------------------------------------------



இயற்கையின் அற்புதப் புதையல் கொண்ட அறிவு செரிந்த பதிவு இது. உலகில் உள்ள ஒவ்வொறு மனிதரும் இதை கட்டாயம் படிக்க வேண்டும்.

டெங்கு காய்சலை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் காய்சல் என்றால் என்ன என்று பார்ப்போம்.

மனித உடல் பல லட்சம் கோடிக்கணக்கான செல்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. 37.2 Trillion செல்கள் என சொல்லப்படுகிறது. ஒவ்வொறு செல்லும் உணவு அருந்தி, சக்தியை கொடுத்து, கழிவுகளை வெளியேற்றுகிறது.

இது தொடர்ந்து நடைபெற்று வரும், நமது தவறான உணவு மற்றும் வாழ்கைமுறை காரணமாக செல்களின் கழிவுகளை வெளியேற்றும் பணியில் சுணக்கம் ஏற்படுகிறது.

எனவே கழிவுகள் ஆங்காங்கே தேங்கிவிடுகிறது. சரி இப்பொழுது குழந்தைகளின் பால் புட்டியை எந்த தண்ணீரில் கழுவுவீர்கள் ? சுடு தண்ணீரில் தானே. ஏன் ? அழுக்குகள் நீங்கும், கிருமிகள் அழியும்.

சரி சிலர் தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்கிறார்கள். ஏன் ? கிருமிகள் அழியும். கொதிக்கவைத்து குடிப்பது தவறு தான் அதனுள் இப்பொழுது செல்ல வேண்டாம்.

தண்ணீரை சூடு செய்யும் போது அதில் சில பொருட்கள் நகர்வதை நீங்கள் பார்க்கலாம். சூடு ஆகும் போது நீரின் Molecules அனைத்தும் நகரத்துவங்கும்.

உணவுப் பொருட்களை சூடு செய்யும் போது அதில் இருந்து மணம் வெளிப்படுவதை நீங்கள் அறிவீர்கள். உணவில் உள்ள மணத்தை சூடு நகர்த்தி வெளி கொணர்ந்தது.

நமது நாட்டில் உள்ள பூக்களுக்கு மணம் உண்டு, காரணம் வெப்ப மண்டல நாடு. சூடு பூவின் மணத்தை நகர்த்தி வெளி கொணர்ந்தது.

ஊட்டி போன்ற குளிர் பிரதேச பகுதிகளில் உள்ள பூக்களுக்கு மணம் உண்டா ? என நீங்களே பரிசோதித்து பாருங்கள். பூ அழகாக இருக்கும் மணம் இருக்காது.

வயதான முதியவர் இறந்துவிட்டார் கையை தொட்டு பார்த்தால் ஐஸ் போல் உள்ளது. அசைவுகள் இல்லை. உயிருடன் இருந்த போது சூடு இருந்தது, அசைவு இருந்தது.

சுடாக இல்லாவிட்டால் இரத்தத்தில் வேகம் இல்லை என்ற பாடல் வரிகளையும் நினைவுப்படுத்துகிறேன். இது போல் இன்னும் பல உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

இதில் இருந்து என்ன தெரிகிறது. சூடு ஒரு பொருளை நகர்த்தும் என தெரிகிறது. சூடு இருந்தால் Movement இருக்கும் என தெரிகிறது. இது இயற்கை விதி. சூடு தான் சக்தி ( Energy ).

உடல் தனக்கு தேவையான பொருளை ஒரு போதும் வெளியேற்றாது. அதேப்போல் தனக்கு தேவை இல்லாத பொருளையும் உள்ளே வைத்திருக்காது.

இப்பொழுது நமது உடலில் கழிவுகள் தேங்கி உள்ளனவா. அதற்கு வருவோம். ஒரு பொருளை நகர்த்த என்ன வேண்டும் ? வெப்பம்.

சரி இப்பொழுது உடலில் கழிவுகள் அதிகம் தேங்கிவிட்டது. உடல் என்ன செய்யும் ? நீ எக்கேடோ கெட்டு நாசமாய் போ என விட்டுவிடுமா ? அல்ல.

உடல் நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள மாவுச்சத்தை (Glucose) அதிகம் எரித்து வெப்பத்தை உருவாக்கும். இந்த வெப்பம் என்ன செய்யும் ?

தேங்கி உள்ள கழிவுகளை நகர்த்தி நகர்த்தி இரத்த ஓட்டத்தில் கலக்கச்செய்யும். பின் இந்த கழிவுகள் அனைத்தும் தரம் பிரிக்கப்படும்.

எந்த எந்த கழிவுகளை எந்த வழியாக வெளியேற்றினால் உடலுக்கு தீங்கு நேராது என்று உடல் முடிவு செய்து அதன் வழியாக கழிவுகளை வெளியேற்றிவிடும்.

மூக்கின் வழி சளியாகவும்.
பொருங்குடலின் வழி திடக்கழிவாகவும்.
தோலின் வழி வியர்வையாகவும்.
சிறுநீர்பை வழி சிறுநீராகவும்.

உடல் பாதுகாப்பான முறையில் கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றி விடுகிறது.

இதைத்தான்னய்யா காய்சல் என்கிறோம். நமது தவறான உணவு மற்றும் வாழ்க்கைமுறை காரணமாக தேங்கிய கழிவுகளை உடல் வெப்பத்தை உருவாக்கி வெளியேற்றும் செயலே காய்சல்.

உலகிலேயே மிகச்சிறந்த நண்பன் யார் தெரியுமா ? உங்கள் உடல் தான். நீங்கள் அவனுக்கு கோடி முறை கெடுதல் செய்தாலும் கோடியை தாண்டி உங்களுக்கு நல்லது மட்டுமே செய்வானய்யா. கெடுதலை நினைக்க கூட அவனுக்கு தெரியாது.

அப்பேர்பட்ட இயற்கையின் அற்புதப்படைப்பான, இந்த உடல் வெப்பத்தை உண்டாக்கி கழிவுகளை வெளியேற்றும் போது பலர் என்ன செய்கிறார்கள் ?

அலோபதி சிகிச்சையில் ஊசி போட்டு மாத்திரை எடுக்கிறார்கள். இந்த ஆங்கில மருந்து என்ன செய்கிறது ? கழிவுகளை வெளியேற்ற உடல் சிரமப்பட்டு உருவாக்கிய வெப்பத்தை குறைத்து விடுகிறது.

முதல் முறையாக நீங்கள் செய்த கெடுதலால் உங்கள் நண்பனான உடல் கலங்குகிறான். அவன் தான் உங்கள் நண்பன் ஆயிற்றே விடுவானா. மீண்டும் வெப்பத்தை உருவாக்க முயற்சிப்பான். தொடர்ந்து நீங்கள் ஆங்கில சிகிச்சை எடுத்து. வெப்பத்தை குறைத்து விடுவீர்கள்.

வெப்பம் குறைந்ததால் Movement இருக்காது. Movement இல்லாததால் கழிவுகள் வெளியேறாமல் உடலிலேயே தங்கிவிடுகிறது. மீண்டும் மீண்டும் காய்சலை ஏற்படுத்தி கழிவுகளை வெளியேற்ற முயற்சிப்பான்.

நீங்களும் தொடர்ந்து ஆங்கில சிகிச்சை எடுத்து கழிவுகளை அடக்கி வைத்துவிடுவீர்கள். இப்படி தொடர்ந்து பல வருடங்களாக தேங்கிய கழிவுகள் பல்வேறு நோய்களாக உருவெடுக்கிறது.

பல நாடுகளில் காய்சலுக்கு ஆங்கில மருத்துவர்கள் வைத்தியம் பார்பதில்லை என உங்களுக்கு தெரியுமா ? காய்சலுக்காக வைத்தியம் பார்க்க சென்றால் திட்டி அனுப்பி ஓய்வெடுக்கச் சொல்வார்கள்.

இங்கு உள்ள நிலமையோ தலைகீழ் சொல்லவே வேண்டாம். ரோட்டில் நடந்துச்செல்பவனை வழி மறித்து ஊசி போடும் நாடு இது.

உடல் தன்னுள் தேங்கிய கழிவுகளை வெளியேற்றும் செயலே காய்சல். இந்த உடல் சுத்திகரிப்பு வேலை நடக்கும் போது அமைதியாக ஓய்வு எடுத்தாலே இரண்டு மூன்று நாட்களில் காய்சல் தானாக சரியாகும்.

சரி இப்பொழுது டெங்கு டங்குங்கராங்களே அதற்கு வருவோம் வாங்க.

ஒரு இடத்தில் குப்பை உள்ளது, அங்கு என்ன இருக்கும் ? பூச்சி, புழுக்கள்.

நாய் அடிபட்டு ரோட்டில் இறந்துள்ளது. அதன் உடலில் என்ன இருக்கும் ? புழுக்கள்.

தானியங்களை காற்று கூட புகாத புட்டியில் அடைத்து வைத்துவிட்டோம். சிறிது நாள் கழித்து திறந்து பார்த்தால் அதில் என்ன இருக்கும் ? வண்டுகள், பூச்சிகள், புழுக்கள்.

குப்பை மற்றும் நாய் மீது இருந்த புழு பூச்சிகள் சிறிது நேரத்திற்கு முன்பு அங்கு இல்லை. இந்த புழு பூச்சிகள் எங்கிருந்து வந்தது ? பக்கத்து ஊரில் இருந்து பேருந்தில் ஏறி வந்ததா ?

காற்று கூட புகாத புட்டியில் அடைத்து வைக்கப்பட்ட தானியத்தில் புழு, வண்டுகள் எங்கிருந்து வந்தது ? சிந்தியுங்கள்.

"இயற்கை விதி என்னவென்றால் எங்கு உணவு உள்ளதோ, அங்கு உயிர்கள் படைக்கப்படும்."

புழு, பூச்சி, வண்டு எல்லாம் எங்கிருந்தும் வரவில்லை. அந்த இடத்திலேயே உற்பத்தி ஆனது என தெரிந்து கொண்டோம்.

ஒரு ஏக்கரில் வொண்டைக்காய் செடி பயிரிடப்பட்டுள்ளது. ஒரு செடியில் அதை உண்ணும் பூச்சி வந்து விட்டது. அந்த பூச்சி பக்கத்து செடியில் உட்கார்ந்து இது நமது உணவுதானா என முகர்ந்து பார்க்கும்.

அடுத்தடுத்த செடியில் பரிசோதித்து. தனது உணவு தான் நிறைய உள்ளது என தெரிந்துகொண்ட உடனே தனது இனத்தை வேகமாக பெருக்க ஆரப்பித்துவிடும்.

ஒவ்வொறு உயிரினமும் தன்னை இப்பூவுலகில் நிலை நிறுத்திக்கொள்ள இறைவன் கொடுத்த அறிவு இது.

மனிதனும் அப்படித்தானே, எனது பொருளாதாரத்திற்கு இரண்டு குழந்தைகள் போதும் என நிறுத்திக்கொள்கிறானே.

அடுத்த இயற்கை விதி உணவின் அளவை பொருத்து உயிரினங்கள் பெருகும்.

இயற்கை விதி இரண்டு !

1 - உணவு உள்ள இடத்தில் உயிரினங்கள் படைக்கப்படும்.

2 - உணவின் அளவிற்கு ஏற்ப உயிரினங்கள் பெருகும்.

சரி, புழு பூச்சிகளுக்கு, அந்த குப்பை என்னவாகிறது ? உணவு.

பூழுவிற்கு, நாய் என்னவாகிறது ? உணவு.

வண்டிற்கு, தானியம் என்னவாகிறது ? உணவு.

இந்த இயற்கை விதிகளை அப்படியே உடலுக்குள் பொருத்துங்கள்.

நமது தவறான உணவு மற்றும் வாழ்க்கைமுறை காரணமாக உடலில் கழிவுகள் தேங்குகிறது. இந்த கழிவுகள் கிருமிகள் என சொல்லப்படும் நுண்ணுயிர்களுக்கு உணவாகிறது.

"கழிவு, கிருமிகளுக்கு என்னவாகிறது ? உணவு."

கிருமிகளின் உணவாகிய கழிவுகளை நீங்கள் சேர்த்து வைத்ததால் அதை உண்டு அழிக்க கிருமிகள் அங்கு இயற்கையால் படைக்கப்பட்டு விட்டது. இப்பொழுது உணவு (கழிவு) உள்ள இடத்தில் உயிர்கள் (கிருமிகள்) படைக்கப்பட்டு விட்டதா ? ஆம்.

எப்படி வெண்டை செடியில் உள்ள பூச்சி, அதிக உணவை கண்டு தனது இனத்தை பெருக்கியதோ அதேப்போல், நுண்ணுயிர்கள் அதிக உணவை (கழிவு) கண்டு தனது இனத்தை பெருக்கும்.

இப்பொழுது நீங்கள் இரத்த பரிசோதனை செய்து பார்த்தால் கிருமிகளின் எண்ணிக்கை அதிகமாக காட்டும். அதுதான் அதிக உணவை கண்டு தனது இனத்தை பெருக்கிவிட்டதே.

உணவு இல்லை என்றால் மனிதன் என்ன ஆவான் ? இறந்து விடுவான் அல்லவா, அது போல் தான் உணவுகளாகிய கழிவுகள் தீர்ந்த பின் கிருமிகள் அழிந்துவிடும்.

நீங்கள் சேர்த்து வைத்து கழிவு, டெங்கு கிருமிக்கு பிடித்த உணவாக இருந்தால் டெங்கு காய்சல்.

நீங்கள் சேர்த்து வைத்த கழிவு, சிக்கன் குனியா கிருமிக்கு பிடித்த உணவாக இருந்தால் சிக்கன் குனியா காய்சல்.

நீங்கள் சேர்த்து வைத்த கழிவு, பன்றிக்காய்சல் கிருமிக்கு பிடித்த உணவாக இருந்தால் பன்றிக்காய்சல்.

அவ்வளவுதாங்க.

அனைத்து காய்சலுக்கும் மூல காரணம் கழிவுகளின் தேக்கமே.

இயற்கை விதி எப்படி உள்ளும் வெளியும் பொருந்துகிறது என்று பாருங்கள்.

இதை தான்

அண்டத்தில் உள்ளதே பிண்டம்
பிண்டத்தில் உள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்று தான்
அறிந்து தான் பார்க்கும் போதே.

என்று சித்தர் பாடல் நமக்கு உணர்த்துகிறது.

இறப்புகள் நிகழ்வதற்கு காரணம் இரண்டு

1 - அலோபதி சிகிச்சை.
2 - ஊடகம் ஏற்படுத்திய பயம்.

அனைத்து குற்றமும் நம்முள்ளே வைத்துக்கொண்டு அப்பாவி கொசுவின் மீது பழி போடுகிறோமே. இந்துனூண்டு கொசுவை வைத்தும், கண்ணுக்கு தெரியாத கிருமியை வைத்தும் எத்தனை எந்தனை வியாபாரங்கள்.

கொசு விரட்டிகள் - பயன்படுத்தினால் நுரையீரல் நோய்கள் - Corporate Allopathy மருந்து வியாபாரம் - விளைவு சாவு.

வீதிகளுக்கு கொசு மருந்துகள் - கொசுவை அழிக்கிறேன் என்ற பெயரில் பல்லுயிர் அழிப்பு - Collapse of Biodiversity - இயற்கை வழி விவசாயம் அழிவு - Corporate இரசாயன மருந்து வியாபாரம் - விளைவு மலடாய் போன மண்.

டெங்கு கொசு - டெங்கு காய்சல் - Corporate Allopathy மருந்து வியாபாரம் - விளைவு சாவு. என நீண்டு கொண்டே போகிறது பட்டியல்.

கிருமிகள் - Water Filter System வியாபாரம் - இதனால் நோய் - Corporate Allopathy மருந்து வியாபாரம் - விளைவு சாவு.

கிருமிகள் - Soap ,Hand Wash, அந்த Wash இந்த Wash கண்ட கண்ட Wash - விளைவு சாவு.

கிருமிகள் - தடுப்பூசி, Vaccination - Corporate Allopathy Business - விளைவு சாவு.

கிருமி வியாபார பட்டியலுக்குள் சென்றால் நிச்சயம் இந்த பதிவு போதாது. இதனுடன் நிறைவு செய்யலாம்.

இவர்களின் நோக்கம். நாங்கள் சொல்வதை சாப்பிடு, நாங்கள் சொல்வதை படி, எங்களுக்கு வேலை செய், எங்கள் பொருட்களை பயன்படுத்து, எங்கள் மருத்துவம் பார், எங்களுக்கு சம்பாதித்து கொடுத்து விரைவில் செத்துப்போ என்பதே.

இந்த உலக வல்லாதிக்க தீய சக்தியை அழிக்க நன்மக்கள் நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும்.

இவர்களின் கொட்டத்தை அடக்க ஒரே வழி, நமது முன்னோர்கள் நமக்கு அழகாய் வடிவமைத்துக் கொடுத்த அன்பும், அறமும், பன்பும் செரிந்த தற்சார்பு வாழ்க்கை முறைக்கு திருப்புவது மட்டுமே.

கழிவுகளை உடலில் தேக்கியது யார் குற்றம் ? டெங்கு வருவது வெளியில் உள்ள கொசுவால் அல்ல உங்கள் உடலில் உள்ள குப்பையால் தான் என இப்பொழுது தெரிகிறதா ? புரிகிறதா ?

உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா யாருக்கு நோய் எதிர்பு சக்தி அதிகமாக உள்ளதோ அவர்களுக்குத்தான் காய்சல் வரும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் காய்சல் வர வாய்ப்பே இல்லை.

கொசுக்களினாலோ, கிருமிகளினாலோ நோய் வருவது உண்மையாக இருந்தால் என்றைக்கோ மனித இனம் உரு தெரியாமல் அழிந்து போயிருக்கும்.

உண்மை என்னவென்றால் கிருமிகள், பல்லுயிர்கள் உயிருடன் இருந்தால் தான் நாம் இந்த உலகில் உயிருடன் வாழ முடியும்.

பால் தயிராவது கிருமியால் தான்.
மாவு புளிப்பது கிருமியால் தான்.
சோறு நீராகாரமாவது கிருமியால் தான்.
பல பண்நாட்டு உணவுகள் பக்குவமடைவது கிருமியால் தான்.
குப்பை மட்குவது கிருமியால் தான்.
மண் வளமாவது கிருமியால் தான்.
உண்ட உணவு செரிப்பதே கிருமியால் தான்.
ஏன் முதன் முதலில் உயிர் உருவானதே இந்த கருமியால் தான்.

உண்மை இப்படி இருக்க. கிருமியினால் நோய் வரும் என்பது அண்டப்புளுகு. Corporate Allopathy தனது வியாபாரத்தை பெருக்கவே இந்த புளுகு புளுகுகிறது.

உலக வல்லாதிக்க தீய சக்திகள் தனது மென்பொருள் ஏற்றப்பட்ட சுயமாக சிந்திக்கத் தெரியாத மருத்துவர்களை வைத்து அரசுகளை கைக்குள் போட்டுக்கொண்டு ஒன்றும் இல்லாத இந்த கொசுவை வைத்தும், கிருமிகளை வைத்தும் மிகப்பெரும் வியாபார வேட்டையில் ஈடுபடுவது மட்டும் அல்லாமல் மக்களையும் அழித்து வருகிறது.

நாம் நமது உடலை பற்றி தெரிந்துகொள்ளாவிட்டால் இப்படித்தான் தொடர்ந்து நமது தலையில் மிளகாய் அரைத்து அழிப்பார்கள்.

நாம் கற்க வேண்டிய முதல் கல்வி உடலை பற்றிய கல்வியாக இருக்க வேண்டும். பள்ளிகளில் இதை தனிப்பாடமாகவே கொண்டு வர வேண்டும்.

இயற்கையின் அற்புதப்படைப்பான இப்பூவுடலின் பேராற்றலை புரிந்து கொள்ளாமல், உலக வல்லாதிக்க தீய சக்திகளுக்கு நமது அறிவை பலி கொடுத்தது நம் குற்றமே.

அழிக்க வேண்டியது கொசுவையா ?

நமது தவறான உணவு மற்றும் வாழ்க்கை முறையையா ?

என நீங்களே முடிவு செய்யுங்கள்.

நல் உள்ளம் படைத்தோர் இந்த கட்டுரையை உலக மக்களுக்கு கொண்டு செல்வீர்கள் என நம்புகிறேன்.

நன்றி

ஹீலர்.இரா.மதிவாணன்.