வீராணம் திட்டத்தின் மொத்த திட்ட மதிப்பு, 16 கோடி.
ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ஊழலைப்பார்த்து விட்டு 26 கோடி ரூபாய் என்பது ஒரு பெரியதொகையாக தோன்றாமல் போகலாம்.
இத்திட்டம்மதிப்பீடு செய்யப் பட்ட போது, சென்னை அண்ணாசாலையில் வீட்டோடு சேர்த்து, 1240 சதுர அடி இடத்தைமாறன் ரூ.45,000/- க்கு வாங்கியுள்ளார் என்பதை வைத்து அந்தக் காலத்து பண மதிப்பை புரிந்துகொள்ளுங்கள்.
தொழில் அதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகளின்நெருங்கிய தொடர்பால், நஷ்டப் படுவது என்றுமேமக்கள் பணமாகத்தான் இருக்கிறது.
முரசொலி மாறனுக்கு சென்னை பச்சையப்பன்கல்லூரியை நடத்தும், பச்சையப்பன் அறக்கட்டளையில்உறுப்பினராக வேண்டுடமென விருப்பம். பச்சையப்பன்அறக்கட்டளையில் உறுப்பினராவது. பச்சையப்பன்ட்ரஸ்ட் என்பது பாரம்பரியமிக்க ஒரு ட்ரஸ்டாகும். இந்தட்ரஸ்டில் உறுப்பினர் ஆவது சமுதாயத்தில் மிகப் பெரியஅந்தஸ்தை பெற்றுக் கொடுக்கும்.
அதனால் எப்படியாவது இந்த அறக்கட்டளையில்உறுப்பினராக வேண்டுமென மாறன் விரும்பினார். 1970ல் பச்சையப்பன் அறக்கட்டளையில் உறுப்பினராகஇருந்த சத்யநாராயணா பிரதர்ஸ் நிறுவனத்தின்உரிமையாளர் சத்யநாராயணாவின் மருமகன்புருஷோத்தம் என்பவரோடு, மாறன் “வாங்க பழகலாம்”என்று பழகத் தொடங்குகிறார்.
புருஷோத்தமுக்கு மாறனின் நட்பு என்ன கசக்கவாசெய்யும் ? இவர் தொழில் அதிபர். மாறன்,முதலமைச்சரின் மருமகன். அவரும், நெருங்கிப்பழகுகிறார்.
1970 ஜனவரியில், பச்சையப்பன் ட்ரஸ்ட்அறங்காவலராக இருந்த எம்ஏஎம்.முத்தையா செட்டியார்இறக்கிறார். அவர் இறந்தவுடன், மாறன், ‘அண்ணன்எப்போ சாவான், திண்ணை எப்போ காலியாகும்’ என்றுஅந்தக் காலியிடத்தில் தான் உறுப்பினராக வேண்டும்என்று தனது விருப்பத்தை புருஷோத்தமிடம்தெரிவிக்கிறார். முதலமைச்சரின் மருமகனை எதிர்த்து,வேறு யாரும் தேர்ந்தெடுக்கப் பட்டு விட முடியுமா என்ன?
மாறனின் பெயரை புருஷோத்தம் முன்மொழிந்து மாறன்பச்சையப்பன் அறக்கட்டளையின் உறுப்பினராகிறார்.பிறகு சிறிது நாட்களிலேயே, அந்த அறக்கட்டளையின்தலைவர் பதவியையும் கைப்பற்றுகிறார் மாறன்.
தலைவர் பதவியை மாறனுக்கு விட்டுக் கொடுத்தபுருஷோத்தம் கைமாறாக எதுவுமே எதிர்ப்பார்க்கமாட்டாரா ? எதிர்ப்பார்த்தார். மாறனிடம், தங்கள்நிறுவனமான சத்தியநாராயணா பிரதர்ஸூக்கு, வீராணம்குழாய்கள் அமைக்கும் உத்தரவை பெற்றுத் தருமாறுகூறுகிறார்.
மாறன், “நான் காண்ட்ராக்ட் வாங்கித் தர்றேன்… பதிலுக்குநீங்கள் என்ன தருவீர்கள்” என்று கேட்கிறார். என்னவேண்டும் என்று கேட்டதற்கு, ஒப்பந்தத்தில் இரண்டரைசதவிகிதத்தை கமிஷனாகத் தர வேண்டும் என்று மாறன்கேட்கிறார்.
உடனே கணக்குப் போடுகிறார்கள். மொத்த திட்டச்செலவு 16 கோடி. அதில் இரண்டரை சதவிகிதம் என்பது40 லட்சம். இந்தத் தொகையை கொடுத்து விடுங்கள்என்று மாறன் கூறவும், புருஷோத்தமும் ஒப்புக்கொள்கிறார்.
பூர்வாங்கப் பேச்சுவார்த்தை முடிந்து விட்டதல்லவா ?அடுத்த கட்டத்திற்குப் போகிறார்கள். சத்யநாராயணாபிரதர்ஸ், நிறுவனத்திற்கு, பூர்வாங்கமாக ஒப்பந்தம்வழங்கி ஒரு உத்தரவு வேண்டுமென்று கேட்கிறார்கள்.மாறன் மட்டும் சளைத்தவரா என்ன ? சரி உங்களுக்குஅது போல ஒரு உத்தரவு வழங்கப் படும். “அதுக்குமுன்னால பேசிய தொகையை குடுங்க” என்கிறார் மாறன்.
புருஷோத்தமுக்கு வேறு வழி…. தனது மாமனார்சத்தியநாராயணா ரெட்டியிடம் இந்தத் தகவலைதெரிவிக்கிறார். அவர், “இவ்வளவு பெரிய தொகையைமொத்தமாக தர இயலாது. அதனால் கொஞ்சம்குறைத்துக் கொள்ளச் சொல்லி பேசு” என்று கூறுகிறார்.
மாறனிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. மொத்தமாக தரஇயலாது. முதலில் 10 அல்லது 15 லட்சம் வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார். மாறனோ, “நான்ஒன்றும் பெரிய தொகையை கேட்டு விடவில். மிககுறைந்த தொகையாகிய 40 லட்சத்தைத் தான்கேட்டுள்ளேன். குடுத்தா குடுங்க…. இல்லன்னா எவ்ளோபேரு, ரெடியா இருக்காங்க தெரியுமா ? “ என்றுகூறுகிறார்.
ஒரு வழியாக, மீதத் தொகைகளை பின்னால் தருவதுஎன்றும், முதல் தவணையாக அட்வான்ஸாக ஒரு தொகைதரப்பட வேண்டும் என்றும் முடிவெடுக்கப் படுகிறது.
ஒப்பந்தப் புள்ளிகள் முடிவடைவதற்கு முன்பாகவே,பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்நிலையிலேயே, புருஷோத்தமும், அவர் மாமனார்சத்யநாராயணா ரெட்டியும், மாறனோடு சேர்ந்துகருணாநிதியின் இருப்பிடத்திற்குச் சென்று, கரன்சிநோட்டுக்களாக, 5 லட்ச ரூபாயை வழங்குகிறார்கள்.
இதில் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும்.பேசுவதெல்லாம், தமிழ் எங்கள் மூச்சு, இதயத்தின் வீச்சு,உயிரே போச்சு என்றெல்லாம் பேசுவபர்கள், துட்டுவாங்கும் விவகாரத்தில் மட்டும், தெலுங்கு ரெட்டியை தேர்ந்தெடுக்கிறார்கள் பார்த்தீர்களா…. ? பணத்துக்கு நிறமோ, மொழியோ ஏது…. ?
முதல் தவணை தொகை கொடுக்கப் பட்டவுடன்,சத்யநாராயணா பிரதர்ஸ் நிறுவனத்துக்கு வரிசையாகஅரசுப் பணம் வழங்கப் படுகிறது. அதையொட்டி,பேசிய தொகையை தருமாறு, நெருக்கடி கொடுக்கப்படுகிறது.
இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக அரசிடமிருந்துசத்யநாராயணா பிரதர்ஸுக்கு அரசு வழங்கிய மொத்தத்தொகை 3.9 கோடி. புருஷோத்தம், கருணாநிதிக்கு,நேரடியாகவும், மாறன் மூலமாகவும் வழங்கிய தொகை32 லட்சம்.
இந்த தொகையை இவர் கருப்புப் பணத்திலிருந்துவழங்கியுள்ளார், அதனால், இவரும், இக்குற்றத்திற்குஉடந்தையானவர், இவர் வாதத்தை ஏற்றுக் கொள்ளமுடியாது என்றெல்லாம் கருணாநிதி தரப்பில் வாதாடப்பட்டது. ஆனால், புருஷோத்தமன், தேதி வாரியாக,எந்தெந்த நாட்களில், வங்கியிலிருந்து, எவ்வளவுதொகை எடுக்கப்பட்டு, கருணாநிதியிடம் கொடுக்கப்பட்டது என்ற விபரங்களை கமிஷன் முன்பு தாக்கல்செய்தார்.
புருஷோத்தம் தனது சாட்சியத்தில், ஒரு முறைகருணாநிதியிடம் நேரடியாக பணத்தை எடுத்துச் சென்றுகொடுத்ததை இப்படி விவரிக்கிறார்.
“கரன்ஸி நோட்டுக்களாக, 6 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு மாறன் வீட்டுக்குச் சென்றோம். மாறன்கருணாநிதி வீட்டிக்குக் கூட்டிச்சென்றார். பணம்அடங்கிய தோல் பெட்டியை மேசை மீது கருணாநிதிமுன்னிலையில் வைத்தேன். கருணாநிதி பணத்தைஎடுத்துக் கொண்டு காலிப் பெட்டியை திருப்பிக்கொடுத்தார்“
இந்த ஒப்பந்தம் குறித்து பேச்சு வார்த்தைகள் நடந்துகொண்டிருந்த போது, சிவராமன் என்றபொதுப்பணித்துறை அதிகாரி, தாராப்பூர் மற்றும்,சத்யநாராயணா பிரதர்ஸ் ஆகிய இரு நிறுவனங்களின்ஒப்பந்தப் புள்ளிகளையும் ஒப்பிட்டுப் பார்த்து,முக்கியமான ஒரு விஷயத்தைச் சொன்னார்.
குழாய்கள்அமைக்கும் போது, அவற்றை சோதனை செய்து பார்க்க, 12 கோடி காலன் தண்ணீர் தேவைப்படும் என்றும் அந்தத்தண்ணீருக்கு ஆகும் செலவாக அரசு, தங்களுக்கு 96லட்சம் வேண்டுமென்றும் கேட்டிருந்தனர்.
தாராப்பூர்நிறுவனமோ, இது போன்ற ஏற்பாட்டிற்கு ஆகும்செலவை அவர்களே ஏற்றுக் கொள்வதாகதெரிவித்திருந்தனர். ஆனால், இதையெல்லாம் யார்காதில் வாங்குவது…. ? இந்த ஆட்சேபணையையும் மீறி,சத்யநாராயணா நிறுவனத்துக்கே வேலை ஆணைவழங்கப் பட்டது.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய கணக்காயர் (சிஏஜி)அறிக்கைதான் முதலில், ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம்கோடி நஷ்டம் என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டியது.
அதைப் போலவே, மாநில கணக்காயர் குழு, வீராணம்திட்டத்தை முழுமையாக ஆராய்ந்து, மொத்தம்எவ்வளவு மக்கள் பணம் விரயமாகியுள்ளது என்று ஒருஅறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையின் படி,கூடுதல் நிதிச் சலுகைகள், மிகையாக கொடுக்கப் பட்டதொகை, தவிர்க்கத் தக்க செலவு, தரக்குறைவானகுழாய்களால் ஏற்பட்ட நஷ்டம், தரக்குறைவானசிமெண்டு பயன்படுத்தியது, சோதனையிடப்படாதகுழாய்களுக்கு சோதனை செய்ததாக வழங்கப் பட்டதொகை, மேற்பார்வை பணிக்கான கூடுதல் செலவு என்றுமொத்தத்தில் 7 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு என்றுஅறிக்கை சமர்ப்பித்தது.
இந்த அறிக்கை மாநில கணக்காயர் சமர்ப்பித்ததால்,அவரை தமிழின விரோதி, ஆரிய கைக்கூலிஎன்றெல்லாம் கருணாநிதியால் ஏச முடியவில்லை.
இந்த ஊழலில், கருணாநிதி மட்டும் தான் பணம்வாங்கினாரா மாறன் வாங்கவேயில்லையா என்ற கேள்விஎழும். மாமா வாங்கினால் என்ன மருமகன் வாங்கினால்என்ன.. இருந்தாலும், அவர் பங்குக்கு ஏதாவது செய்யவேண்டாமா ?
முரசொலி கட்டிடம் கட்டும் பணி, சத்யநாராயணாபிரதர்ஸின் துணை நிறுவனமான மஹாலட்சுமிகன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்திடம் ஒப்படைக்கப் படுகிறது.அதற்கான தொகையை மாறன் கொடுத்தார் என்றுஅவசரப்பட்டு முடிவெடுத்து விடாதீர்கள். தங்களிடம்சிக்கியவர்களை பட்டாபட்டி அண்டர்வேரோடுஅனுப்புவதில் இவர்கள் கைதேர்ந்தவர்கள்.
வேலையையும், கட்டுமானப் பொருட்களையும்,இலவசமாகவே மாறன் பெற்றார். இது குறித்து பதில்அளித்த மாறன், மஹாலட்சுமி கன்ஷ்ட்ரக்ஷன் நிறுவனம்,சத்யநாராயணா நிறுவனத்தின் துணை நிறுவனம் என்றவிபரம் தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்…..ஊழலின் சாட்சியாக முரசொலிக் கட்டிடம் இன்றும்நிற்கிறது.
காலம் செல்லச் செல்ல, சத்யநாராயணா பிரதர்ஸ்தங்களுக்கு வழங்கப் பட்ட வேலையை செய்துமுடிக்காமல் பணிகள் அப்படியே நின்று போகின்றன.அரைகுறையாக செய்யப் பட்ட பணிகளால்சாலையெங்கும் குழாய்கள் கிடந்தன.
இது குறித்து, கருணாநிதியின் முதன்மைச் செயலாளராகஇருந்த ஆர்.நாகராஜன், தனது சாட்சியத்தில், “1975ம்ஆண்டு அக்டோபர் திங்களில் புருஷோத்தம் என்னைவந்து பார்த்தார். அப்போது நான் மட்டுமே அங்குஇருந்தேன். இந்த நிதி நெருக்கடி எப்படி ஏற்பட்டதுஎன்று கேட்டேன். அவர் சொல்ல தயங்கினார். நான்வற்புறுத்திக் கேட்டேன். வீராணம் திட்டத்தை எங்கள்நிறுவனத்திற்கு வழங்குவதற்காக முதலமைச்சர்கருணாநிதியுடன் முன்னரே செய்து கொண்டஏற்பாட்டின் படி, கமிஷன் தொகையாக 29 லட்சம்தரப்பட்டுள்ளது.
இவ்வளவு பெருந்தொகையைகொடுத்ததால், தம்முடைய தொழில் புழக்கத்துக்காகஇருந்த நடைமுறை மூலதனம் அனைத்தும் முழுவதுமாகதீர்ந்து போய் விட்டது“ என்று சாட்சியம் அளித்துள்ளார்.
ஆக்கவும், அழிக்கவும் வல்லதுதானே அரசு ?
போட்ட திட்டம் வேலை நிறைவேறவில்லை.சத்யநாராயணா பிரதர்ஸ் நிறுவனம் ஏறக்குறையநொடித்துப் போய் விட்டது. என்ன செய்வது…. ? ஒருநபர் இறந்து விட்டால் பிரேதப் பரிசோதனை செய்து,இரங்கல் கூட்டம் போட வேண்டாமா…. ? அப்புறம்இறந்தவருக்கு என்ன மரியாதை ?
5.6.1974 அன்று, திருவாளர்கள் சத்யநாராயணா பிரதர்ஸ்நிறுவனம் இத்திட்டத்தை நிறைவேற்றும் பணியில்ஆற்றிய சாதனைகள் குறித்து கருணாநிதி தலைமையில்ஒரு கூட்டம் கூட்டப் படுகிறது.
அக்கூட்டத்தில் சத்யநாராயணா நிறுவனம் குறித்துகீழ்கண்ட முடிவுகள் எடுக்கப் படுகின்றன.
“சத்யநாராயணா பிரதர்ஸ் நிறுவனத்துக்குதேவைப்படுகின்ற நிர்வாக மற்றும் வல்லுனர் அமைப்புஇல்லை. கால அட்டவணைப் படி தொழிற்சாலையைநடத்துவதற்கு போதுமான நிதி வசதிகளும் இல்லை.இப்படிப் பட்ட மாபெரும் திட்டத்நிறைவேற்றுவதற்குரிய திறமை, திருவாளர்சத்தியநாராயணா நிறுவனத்திடம் உண்டு எனக் கூறிஅவர்கள் திறமை மீது அதிக அளவில் நம்பிக்கைவைத்து மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது.“
கருணாநிதி என்று பொதுப்பணித் துறைஅமைச்சரானாரோ, அந்த நாள் முதலாகவே ஊழலில்ஈடுபடத் தொடங்கினார். கருணாநிதி முரசொலி மாறன்என்று தமிழகத்தை கொள்ளையடித்த மிகப் பெரும்கொள்ளைக்காரர்களாகவே கருணாநிதியின் குடும்பம்உருவாகியது. ஆக்டோபஸ் போல வளர்ந்து இன்றுதமிழகத்தையே சூறையாடிக் கொண்டிருக்கிறது. முரசொலி மாறன் பெற்றெடுத்த தவப்புதல்வர்கள், அவர்கள் பங்குக்கு, தமிழகத்தை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இத்தனை ஊழல்களையும் செய்து விட்டு, அதுவெளிவந்து அம்பலமான பின்னரும், “தமிழர்களே…தமிழர்களே… நீங்கள் என்னை கடலிலே தூக்கிப்போட்டாலும்” என்று தயக்கமின்றிப் பேசுகிறார் கருணாநிதி.
இவர்களிடம் மீண்டும் அதிகாரம் வழங்கப்பட்டால் ?