நெருங்கிப் பழகாதே நெஞ்சமே...



salemblog


நெருங்கிப் பழகாதே நெஞ்சமே - நீ
நெருங்கிட்டா துயரம்தான் மிஞ்சுமே
ஒட்டாமல் பழக நீயும் தெரிஞ்சிக்கோ- அது
ஓடிஞ்சிபுட்டா மனசு வலிக்கும் புரிஞ்சுக்கோ

தாமரைஇலைத் தண்ணீர் போல நட்புடா - அது
தடம் புரண்டு போனா அது தப்புடா
சிரிச்சிக்கிட்டே வருகின்ற நட்புடா - அது
சிதையும் போது மனசுக்குள்ளே கடபுடா

வெள்ளந்தியா இருக்கவேணும் மனசுடா - அது
கொள்ளை போகாம காத்துகிட்டா ஒரு தினுசுடா
நல்ல நட்பை தேடிதேடி அடைஞ்சிடு - அது

கிடைக்காட்டி தனியாளா வாழ்ந்துடு



என்றும் அன்புடன் சா.கி.நடராஜன்.
http://tamizhswasam.blogspot.com/

பயனுள்ள குறிப்புகள்...!!!

பயனுள்ள குறிப்புகள்...!!!

* வெங்காயத்தை நறுக்கும்போது நம் கண்ணுக்குப் புலப்படாத ஆவி வரும். இந்த ஆவியை நெருப்புச் சுட்ட புண்கள் மீது படும்படி வைத்தால் விரைவில் புண் ஆறும். வெங்காயச் சாற்றில் அமிலத் தன்மை இருப்பதே இதற்குக் காரணம்.

* தும்பைப் பூவை தினமும் கொஞ்சம் வாயில் போட்டு மென்று வந்தால் தொண்டையில் சதை ஏற்படாமல் தடுக்கும். தொண்டைப்புண்ணும் ஆறும்.

* காலையிலும் இரவிலும் காய்ச்சிய ஒரு டம்ளர் பசும்பாலில் தேன் கலந்து தினமும் குடித்து வந்தால் சோகை நோய்க்கு மருந்தே தேவையில்லை.

* பெருங்காயத்தைத் தினமும் ஒருவேளையாவது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். வாயுவை வெளியேற்றுவதில் பெருங்காயம் பெரும்பங்கு வகிக்கிறது.

* கரிசலாங்கண்ணி கீரையைப் பருப்பு மட்டும் சேர்த்துப் பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும். இரவு வேளைகளில் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.

* விவசாயிகளுக்கும், சலவைத் தொழிலாளிகளுக்கும் தண்ணீரில் நின்று வேலை பார்ப்பவர்களுக்கும் சாதாரணமாக வரக்ககூடிய கால் நோயான சேற்றுப்புண்ணிற்கு கால்களை ஈரம் போகத் துடைத்துவிட்டு மஞ்சள் தூளைத் தேனில் குழப்பி கால் இடுக்குகளில் தடவி வந்தால் சேற்றுப்புண் ஆறும்.

* தோல் வியாதிகள் காரணமாக உடம்பின் மேல் பகுதி தடித்துச் சொரசொரப்பாக இருக்கும். கொத்துமல்லி இலையை நன்றாக அரைத்து சொரசொரப்பான இடத்தில் மேல் பூச்சாகப் பூசி வந்தால் மூன்று நாட்களிலேயே தோல் மிருதுவாகும்.

* வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

* உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யைச் சாப்பிட்டு வந்தால், இரத்தக் குழாயிலே கொலஸ்ட்ரால் படியாதவாறு தடுக்கும்.

* வாய்ப் புண் வந்தவருக்குப் பகை காரம். முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் ஆறும்.

* ஜாதிக்காயைச் சிறுசிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி போக்கும். தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை மட்டும் ஏராளமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* துளசி நீர் மனித மூளைக்கு வலிமையைக் கொடுக்கக்கூடிய அபாரமான மருந்து. துளசி இலையை ஒரு டம்ளரில் போட்டு ஊற வைத்து அந்தத் நீரைக் குடித்து வந்தால் மூளை பலம் பெறும்.

* தொண்டைப் புண்ணுக்குப் பிறகு கொஞ்சம் மிளகைத் தூளாக இடித்து, அதில் வெல்லம், நெய் கலந்து உருட்டி விழுங்கி வந்தால் முற்றிலும் குணமாகும்.

* அஜீரணம் மற்றும் மந்தத்திற்குச் சிறந்தது கொய்யாவின் கொழுந்து இலை. சாப்பிட்டவுடனே பயனைக் காணலாம்.

* சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து அதில் நூறு மில்லி தேங்காய் எண்ணெய்யை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.

* சொத்தை விழுந்த நகங்களில் மருதாணியை இலையைத் தொடர்ந்து அரைத்துப் பற்று போல் போட்டு வந்தால் சொத்தை மறையும்.

* நெல்லி இலை, மருதோன்றி இலை ஆகிய இரண்டு இலைகளில் ஏதாவது ஒரு இலையை எடுத்து ஒரு சட்டியிலே போட்டு தண்ணீர் விட்டு அவித்து அந்த நீரிலேயே அடிக்கடி வாய் கொப்பளித்து வரவேண்டும். வாய் வேக்காடு ஆவியாகி மறைந்துவிடும்.

* வெள்ளரிப் பிஞ்சில் எந்த வைட்டமின்களும் இல்லைதான். ஆனால் இதைச் சாப்பிடுகிறபோது இரைப்பையில் ஒருவித ரசம் உற்பத்தியாகிறது. இது ஜீரணத்தைத் தூண்டுகிறது.

* வெங்காயம் ஓர் அருமருந்து. பச்சை வெங்காயம் சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீர்படும். வழக்கமாக வெங்காயத்தை உணவில் சேர்த்து வந்தால் முடக்கு வாத நரம்பு நோய்கள் தாக்காமல் தடுக்கும்.

* வாழைப்பழங்களில் சோடியம், கால்ஷியம், பொட்டாஷியம் போன்ற பலவகைச் சத்துக்கள் உள்ளன. ஒரு நாளைக்கு இரண்டு வாழைப்பழங்கள் வீதம் சாப்பிட்டு வந்தால் இருதய அழுத்தம் ஏறாமல் சீராக நடைபெற்று வரும்.

* கறிவேப்பிலையில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால் இதைப் பச்சையாகவே சாப்பிட்டு வரலாம். கறிவேப்பிலை இரத்தத்தைச் சுத்தம் செய்கிறது. பசியைத் தூண்டிவிடுகிறது. வயிற்று இரைச்சலையும் குறைக்கிறது.

* வயிற்றிலுள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் உண்டாகிறது. இந்தக் குடல் புண்தான் அல்சர் எனப்படுவது. இந்த அல்சர் குணமாக வேண்டுமானால் பச்சை வாழைப்பழத்தைச் சாப்பிட்டு வரவேண்டும். குடல்களில் பழுதுபட்ட மெலிசான சவ்வுத் தோல்களைச் சீக்கிரமாக வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடுகிறது பச்சை வாழைப்பழம்.

* வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

* உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யைச் சாப்பிட்டு வந்தால், இரத்தக் குழாயிலே கொலஸ்ட்ரால் படியாதவாறு தடுக்கும்.

* வாய்ப் புண் வந்தவருக்குப் பகை காரம். முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் ஆறும்.

* ஜாதிக்காயைச் சிறுசிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி போக்கும். தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை மட்டும் ஏராளமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* இரவில் படுக்கப் போகும்முன் வெந்நீரில் சிறிது தேன் கலந்து அந்த நீரில் வாயைக் கொப்பளித்து வந்தால் பற்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் பாக்டீரியாக் கிருமிகள் செத்துப் போகும். பற்கள் எனாமல் சிதையாமல் இருக்கும்.

* மஞ்சளை ஒரு கல்லில் உறைத்து ஒரு சலவைச் சோப்புத் துண்டை அதில் குழப்பினால் சிகப்பாகப் பசைபோல் வரும். இதை வேனல் கட்டியின் மேல் பூச, வேனல் கட்டி உடைந்துவிடும். சீழ் வெளியேறும்.

* நுனா இலையோடு சிறிதளவு சீரகம், நெற்பொரி கலந்து தண்ணீர் விட்டு ஒரு சட்டியில் காய்ச்சி கஷாயம் செய்து குடித்து வந்தால் நாவறட்சி அடங்கும்.

* வெள்ளைப் பூசணிக்காய் சாறில் ஒரு கரண்டித் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூளைச்சோர்வு நீங்கும். மூளை உற்சாகத்துடன் இருக்கும்.

வெயில் காலத்தில் நாம் வீட்டில் தயாரிக்கும் ஜூஸ்க்கு பானை நீர் சேர்த்து ஜூஸ் தயாரிக்கவும். ஐஸ் மற்றும் ப்ரிட்ஜ் நீரை தவிர்க்கவும் ஏனெனில் இவை இரண்டும் குடிக்கும் பொழுது ஜில் என்றிருந்தாலும். உடலில் உஷ்ணத்தை அதிகப்படுத்தக்கூடியது. பானை நீர் உடம்புக்கும் நல்ல குளிர்ச்சி தரும்.

ஜூஸ் அல்லது சர்பத் குடிக்கும்போது நமது உமிழ்நீரில் சுரக்கும் அமிலேஸும், பெட்டேஸும் ஐஸூடன் கலந்து அதன் சத்துக்களை முழுமையாக ஜீரணிக்க உதவுகிறது. ஆகவே ஜூஸைத் தண்ணீரைப் போன்று "மடமட' எனக் குடிக்காமல் மெதுவாக உறிஞ்சி உமிழ்நீருடன் கலந்து பருக வேண்டும்.

இளநீரை கண்ணைத் திறக்காமல் சீவி வாங்கிக் கொண்டு முதல் நாள் இடும் இரவில் தண்ணீரில் போட்டு வைத்து காலையில் சீவிக் குடித்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.

வெயில் காலத்தில் நாம் வீட்டில் தயாரிக்கும் ஜூஸ்க்கு பானை நீர் சேர்த்து ஜூஸ் தயாரிக்கவும். ஐஸ் மற்றும் ப்ரிட்ஜ் நீரை தவிர்க்கவும் ஏனெனில் இவை இரண்டும் குடிக்கும் பொழுது ஜில் என்றிருந்தாலும். உடலில் உஷ்ணத்தை அதிகப்படுத்தக்கூடியது. பானை நீர் உடம்புக்கும் நல்ல குளிர்ச்சி தரும்.

ஜூஸ் அல்லது சர்பத் குடிக்கும்போது நமது உமிழ்நீரில் சுரக்கும் அமிலேஸும், பெட்டேஸும் ஐஸூடன் கலந்து அதன் சத்துக்களை முழுமையாக ஜீரணிக்க உதவுகிறது. ஆகவே ஜூஸைத் தண்ணீரைப் போன்று "மடமட' எனக் குடிக்காமல் மெதுவாக உறிஞ்சி உமிழ்நீருடன் கலந்து பருக வேண்டும்.

இளநீரை கண்ணைத் திறக்காமல் சீவி வாங்கிக் கொண்டு முதல் நாள் இடும் இரவில் தண்ணீரில் போட்டு வைத்து காலையில் சீவிக் குடித்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.

தினமும், "வாக்கிங்' போனால், இருதய, சர்க்கரை நோய் வராது என்பது தெரிந்த விஷயம் தான். ஆனால், "ஹாச்... ஹாச்' என்று தும்மல் முதல் ஜலதோஷம் வரை எதுவும் வராமல் இருக்கவும் "வாக்கிங்' இலவச மருந்தாக இருக்கிறது. அமெரிக்க, சியாட்டல் மாநிலத்தில் உள்ள, "ப்ரெட் ஹட்சிசன் புற்றுநோய் மருத் துவ ஆராய்ச்சி மையத்தின்' ஆராய்ச்சியாளர்கள் குழு, இது தொடர்பாக மேற்கொண்ட ஆய்வில், இந்த புதுத்தகவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சிக்குழுவின் தலைவர் கார்னிலா உல்ரிச், தன் ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது: எந்தவகையில் செய்தாலும் பரவாயில்லை. எந்த முறையாக இருந்தாலும், அவற்றால் நல்ல பலன்கள் உண்டு என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எந்த வகை உடற்பயிற்சியாலும், சாதாரண ஜலதோஷம் முதல் காய்ச்சல் வரை எதையும் அண்டாமல் இருக்கச் செய்யலாம்.அதுபோல, தினமும், அரை மணி நேர "வாக்கிங்' போதும். சுறுசுறுப்பாக அரை மணி நேரம் நடந்தால், ஜலதோஷம் கண்டிப்பாக வரவே வராது. இதை நாங்கள் சிலரை வைத்து ஆய்வு செய்ததில் கண்டுபிடித்துள்ளோம். மாதவிடாய் இறுதியை நெருங்கும் பெண்கள், கண்டிப்பாக, "வாக்கிங்' போக வேண்டும். அதனால், பெண்களுக்கு பல பயன்கள் உள்ளன. மார்பக புற்றுநோய் வராமல் தடுப்பதுடன், அத்தகைய பெண்களுக்கு வேறு எந்த பிரச்னையும் ஏற்படாமல் தடுக்கிறது. "வாக்கிங்' போகாத சிலரை தேர்வு செய்து, அவர்களை "வாக்கிங்' போக செய்ததில், அவர்களுக்கு ஒரு மாதத்தில், படிப்படியாக ஜலதோஷம் உட்பட தொற்றுக்கிருமிகள் பாதிப்பு குறைந்து வருவதை கண்டுபிடிக்க முடிந்தது. இவ்வாறு ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

சிறுநீரக கோளருகளுக்கு ஒரு வைத்தியம்

அருகம்புல்லை ஒரு கை பிடியளவு எடுத்து நீர் விட்டு காய்ச்சி வடித்து அதனுடன் சிறிது பால் சர்க்கரை சேர்த்து
அருந்தி வர சிறுநீரக சபந்தமான நோய்கள் மறையும். சிறுநீரகமும் பலமைடயும்.

அருகம்புல் 2 பங்கு கீழாநெல்லி ஒரு பங்கு எடுத்து அரைத்து தயிருடன் சேர்த்து சாபிட்டுவர சிறுநீரினால் வரும் எரிச்சல்
குணமடையும்.

மனக்கவலை என்ற செத்த ஒரு பாம்பு...

ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.
.**
மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது. பாம்புகுரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது . குரங்குக்குக் கொஞ்சம் பயம் வந்து விட்டது.கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன.

ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.

"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு . இது கொத்துனா உடனே மரணந்தான். இவன் பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது " என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன .
*
தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை , எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு , மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன."ஐயோ. புத்தி கெட்டுப் போய் நானே வலிய வந்து இந்த மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே".குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது.நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது. கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.
*
அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார். குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.
*
சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் , தன்னை நோக்கி மனிதர்ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. அவர் நெருங்கி வந்து சொன்னார் ," எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு" என்றார்.குரங்கோ ,"ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும் " என்றது. அவர் மீண்டும் சொன்னார் ," பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு ".அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.அட . நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா .
*
குரங்குக்கு உயிர் வந்தது . அவரை நன்றியுடன் பார்த்தது ."இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே " என்றபடி ஞானி கடந்து போனார்.

*
நம்மில் எத்தனையோ பேர் மனக்கவலை என்ற செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல் கதறிக் கொண்டிருக்கிறோம்.

கவலைகளை விட்டொழியுங்கள்.
***
மகிழ்ச்சியாய் இருங்கள், , ,

 ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்

பெருமையும் கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்

கவலையும் துயரமும் வயிற்று நோய்களை உருவாக்கும்

துக்கமும் அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்

பயமும் சந்தேகமும் சிறுநீரக நோய்களை உருவாக்கும்

எரிச்சலும் கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்

அமைதியை விரும்புவதே அனைத்தையும் குணமாக்கும்.

ஆரோக்கியமான உடலிலிருந்தே ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்கும். உடலின், மனதின் தேவைகளுக்கு மதிப்பளியுங்கள்.

பசிக்கும் போது உணவருந்துங்கள். பசியை நீங்கள் புறக்கணித்தால் பசி உங்களைப் புறக்கணிக்கும். எப்போதும் உடலின் அழைப்பை புறக்கணிக்காதீர்கள்.

"நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"

Who will cry when you die?" - ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்... அதாவது,  "நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?" என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்... “நீ பிறந்த போது, நீ அழுதாய்... உலகம் சிரித்தது... நீ இறக்கும் போது, பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்" என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்... 
salemtamil.blogspot.in

1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்... 

2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள். 

3. அடிக்கடி கவலை படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள். 

4. அதிகாலையில் எழ பழகுங்கள்.  வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே. 

5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள்.  அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும். 

 6. நிறைய நல்ல புத்தகம் படியுங்கள்.  எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள். 

 7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. 

 8. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக ( Gift ) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே. 

9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும். 

10. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள். 

 11. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.

 12. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும், நல்ல நட்பும் கிடைக்கலாம். 

13. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன். 

14. எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள். 

15. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள். 

16. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள். 

17. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும். 

18. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள். 19. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே! "ஆணவம் ஆயுளை குறைக்கும்..." மேற்கண்ட கருத்துக்களை பின் பற்றி, ஆனந்தமாக வாழுங்கள்.. நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பியதை நமது குழுவிற்கு அனுப்பியுள்ளேன்.....!!!!

மெழுகுவர்த்தியின் கண்ணீர்...




ஒரு மெழுகுவர்த்தியின்
கண்ணீர்
எனது 
கைகளில்
தோய்ந்து 
போனது!!!

வெள்ளை
இரத்தமாய்! !!


                                                                       சி.பி. வெங்கட்

கண்ணாடி...

ஒருநாள் ஆபிசில் வேலை செய்யும் பணியாட்கள் அனைவரும் வேலைக்கு சரியான நேரத்தில் வந்து சேர்ந்தனர். நோட்டீஸ் போர்டில் ஏதோ எழுதி இருக்கிறதே என்று அனைவரும் பார்க்க சென்றனர்.
.
அதில் ” உங்கள் வளர்ச்சிக்கும் நம் கம்பெனி வளச்சிக்கும் இடையூராக இருந்த நபர் நேற்று காலமானார்,அடுத்த கட்டிடத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது.அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்” என்று எழுதி இருந்தது.
இதை படித்தவுடன் அவர்கள் எல்லாருக்கம் நம்முடன் வேலை செய்த ஒருவர் இறந்து விட்டாரே என்று வருத்தமாக இருந்தது,பிறகு நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்த நபர் யாராக இருக்கும் என்று அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது.
அனைவரும் அடுத்த கட்டிடத்திற்கு சென்றனர்.சவப்பெட்டி வைத்திருக்கும் இடத்தை நோக்கி ஒருவர் பின் ஒருவராக செல்ல ஆரம்பித்தனர்.சவப்பெட்டியை நெருங்க நெருங்க நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவன் யாராக இருக்கும்,நல்ல வேளை அவன் இறந்துவிட்டான் என்று நினைத்தபடியே முன்னோக்கி சென்றனர்.
சவப்பெட்டியினுள் எட்டி பார்த்தவர்களுக்கு தூக்கி வாரிப் போட்டது.அதில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமே இருந்தது.சவப்பெட்டியுள் யார் எல்லாம் பார்க்கிறார்களோ அவர்கள் முகமே அதில் தெரிந்தது.
கண்ணாடி அருகில் ஒரு வாசகம் எழுதி இருந்தது...”உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் மட்டுமே காரணம்,நீங்கள் வளர வேண்டும் என்றால் அது உங்கள் கையில் மட்டுமே உள்ளது ,உங்கள் வளர்ச்சியை உங்களை தவிர வேறு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்றிருந்தது.
உங்கள் வாழ்கையை உங்கள் முதலாளியால் மாற்ற முடியாது,உங்கள் நண்பர்களால் மாற்ற முடியாது,நீ நினைத்தால் மட்டுமே உன் வாழ்வை மாற்ற முடியும்.
”The world is like a mirror”, it gives back to anyone the reflection of the thoughts

விண்டோஸ் 7 க்கான தொழில்நுட்ப மேம்படுத்துதலை மைக்ரோசாப்ட் நிறுவனம் நிறுத்தியது...

 

 

2009ம் ஆண்டு வெளியிடப்பட்ட விண்டோஸ் 7 இயக்குதளம் இன்று உலகில் பாதி கணினிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இனி இலவசமாக  இயக்குதளத்தில் புதிய வசதிகளை செய்யப்போவதில்லை என அறிவித்துள்ளது மைக்ரோசாப்ட்.
இதனால் யாரும் பயப்படத் தேவையில்லை. தங்களின் புதிய பதிப்பாக வர  இருக்கும்  விண்டோஸ் 10 இயக்குதளத்தை நேர்த்தியாக வடிவமைக்க முயன்று வரும் இன் நிறுவனம். தனது விண்டோஸ் 8 பெற்ற கசப்பான விமர்சனங்களை நீக்கும் வண்ணம் பல முயற்சிகள் செய்து வருகிறது.
நம்மில் பலரும் விண்டோஸ் XP யே நல்லா இருக்கே என பயன்படுத்தி வருகிறோம். இந்தியாவில் காசு கொடுத்து இயக்குதளம் வாங்குவோர் எண்ணிக்கை குறைவாக உள்ளது, ஆனால் அந்த மென்பொருள்கள் மீது பில்கேட்சை விட அதிகமாக விமர்சனம் செய்வோம்.​ 7 இல் உள்ள பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தொடர்ந்து 2020 வரை தீர்வுகளை அளிப்போம் என மைக்ரோசாப்ட் உறுதியளித்துள்ளது.

உலக நீர் தினம் மார்ச் 22 2016 (WORLD WATER DAY!!!)...

உலக நீர் தினம் மார்ச் 22 2016 (WORLD WATER DAY!!!)

1992ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற சுற்றாடல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஐக்கிய நாடுகள் மகாநாட்டில் செய்யப்பட்ட சிபாரிசையடுத்து மார்ச் 22ம் தேதியை உலக நீர் தினமாக ஐ.நா.பொதுச் சபை பிரகடனம் செய்தது. அதைத் தொடர்ந்து கடந்த 18 வருடங்களாக இத்தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.



உயிருள்ள அனைத்து ஜீவன்களினதும் இயக்கத்துக்கு ஆதாரம் நீர். உயிரற்ற ஜடங்களின் தூய்மை பேணவும் உதவுவது நீர். நீரின்றி உலகமே இல்லை. எல்லா வளங்களுக்கும் மூலவளம் நீரே. உலக மக்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த உன்னத பொக்கிசமே நீர். நீர் வளமானது சகல உயிரினங்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியத் தேவையாகும். அதனை பயன்படுத்துவோர்களிடையே மேலும் மேலும் தேவைகள் அதிகரிப்பதனால் இன்று நீர் போட்டிப் பொருளாகவும், சந்தைப் பொருளாகவும் கூட மாறிவிட்டது.

உலகளாவிய ரீதியில் பார்க்கும்போது நீரை அதிகமாகப் பயன்படுத்தும் துறை விவசாயமாகும். 85 சதவீதம் விவசாயத்துக்காக நீர் பயன்படுத்தப்படுகின்றது என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கைத்தொழில்த்துறை 10 சதவீதத்தைப் பயன்படுத்துகின்றது. எஞ்சிய 5 சதவீதமே வீட்டுப் பாவனைக்குரியது. எனவே, அருமையாக உள்ள வளத்தை மக்கள் தற்போது எவ்வாறு பாவிக்கின்றார்கள் என்பதைப் பொறுத்தே எதிர்கால மக்களின் வாழ்வு அமையுமென குறிப்பிடப்படுகின்றது.


 


எனவே, நீர் எங்கள் உயிருக்கு நேர் என்று நாம் கருதி செயல்பட வேண்டும். ஒவ்வொரு துளி நீரும் ஒவ்வொரு பவுண் தங்கம் என எண்ணி நாம் நடந்து கொள்ள வேண்டும். நீர் இன்றேல் பார் இல்லை என்று நாம் கருத வேண்டும். அனைத்து வளங்களுக்கும் தாய்வளம் தண்ணீர். ஊர் வளம் பெற, பார் வளம் பெற நீர் வளம் காப்போம் என இந்த தினத்தில் திட சங்கற்பம் பூணுவோம்.



தித்திக்கும்....திருநெல்வேலித் தமிழ்...

salemtamil.blogspot.in
தென்பாண்டி சீமை என்றும் அழைக்கப்படும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பிற தென்தமிழக மாவட்டங்களிலும் பேசப்படும் வட்டார வழக்கு மொழி திருநெல்வேலித் தமிழ் ஆகும். இவ்வழக்கை நெல்லை தமிழ் என்றும் அழைப்பர்.

தமிழ் மொழி பொதிகை மலையில் பிறந்தது என்பது ஒரு நம்பிக்கை. அந்தப் பொதிகை மலைத் தமிழே நெல்லைத் தமிழாகும். எனவே நெல்லை தமிழ் தமிழின் துவக்கநிலை மற்றும் தூய வடிவம் என்று சிலரால் கருதப்படுகிறது. பெரியோரை 'அண்ணாச்சி' என்று அழைக்கும் நெல்லைத் தமிழ் வேறு எந்தத் தமிழ் வட்டார வழக்கிலும் இல்லை.
இது தற்போதைய திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் திருநெல்வேலி வட்டார வழக்குத் தமிழ் பயன்பாட்டிலுள்ளது. திருநெல்வேலி நாட்டார் வழக்கு தனித்தன்மை வாய்ந்தது. 'கிறு', 'கின்று' போன்ற துணை வினைச் சொற்களைப் பழந்தமிழில் காண்பதரிது. திருநெல்வேலி வழக்கிலும் அவ்வாறே.எடுத்துக்காட்டாக,
  • நான் சொல்லுதேன் - நான் சொல்லுகிறேன்
  • அவன் நிக்கான் - அவன் நிற்கிறான்
  • நீங்க வருதியளோ? - நீங்கள் வருகிறீர்களோ?
  • ஏளா! நீ எப்ப வருத? - ஏ பிள்ளை ! நீ எப்பொழுது வருகிறாய்?
  • முடுக்குது - நெருக்குகிறது
  • சொல்லுதான் - சொல்கிறான்

சொற்கள்

  • அண்ணாச்சி - பெரியோர்களை மரியாதையாக அழைப்பது
  • ஆச்சி : வயதான பெண்மணி -  தமிழகத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 'பாட்டி'யை ஆச்சி என்று அழைப்பார்கள். .
  • பைதா - சக்கரம்
  • கொண்டி - தாழ்ப்பாள்
  • பைய - மெதுவாக
  • சாரம் - லுங்கி
  • கோட்டி - மனநிலை சரியில்லாதவர்.
  • வளவு - முடுக்கு,சந்து
  • வேசடை - தொந்தரவு
  • சிறை - தொந்தரவு
  • சேக்காளி - நண்பன்
  • தொரவா - சாவி
  • மச்சி - மாடி
  • கொடை - திருவிழா
  • கசம் - ஆழமான பகுதி
  • ஆக்கங்கெட்டது -
  • துஷ்டி - எழவு (funeral)
  • சவுட்டு - குறைந்த,மிதி
  • கிடா - பெரிய ஆடு (male)
  • செத்த நேரம் - கொஞ்ச நேரம்
  • குறுக்க சாய்த்தல் - படுத்தல்
  • பூடம் - பலி பீடம்
  • அந்தானி - அப்பொழுது
  • வாரியல் - துடைப்பம்
  • கூவை - ஆந்தை an owl (bird of bad omen)
  • இடும்பு - திமிறு (arrogance)
  • சீக்கு - நோய்
  • சீனி - சர்க்கரை (Sugar)
  • ஒரு மரக்கா வெதப்பாடு - சுமார் 8 செண்ட் நிலம்
  • நொம்பலம் - வலி
  • கொட்டாரம் - அரண்மனை
  • திட்டு - மேடு
  • சிரிப்பாணி - சிரிப்பு
  • திரியாவரம் - குசும்புத்தனம்
  • பாட்டம் - குத்தகை
  • பொறத்தால - பின்னாலே
  • மாப்பு - மன்னிப்பு
  • ராத்தல் - அரை கிலோ
  • சோலி – வேலை
  • சங்கு – கழுத்து
  • செவி – காது
  • மண்டை – தலை
  • செவிடு – கன்னம்
  • சாவி – மணியில்லாத நெல், பதர்
  • மூடு – மரத்து அடி
  • குறுக்கு – முதுகு
  • வெக்க - சூடு, அனல் காற்று
  • வேக்காடு - வியர்வை
  • ஒயித்து - காலை
  • முகரை - முகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறுகதை:மரம் வளர்த்த பிள்ளை!


அது ஒரு பழ மரம். ஒரு சிறுவன் தினமும் வந்து அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆடிப்பாடி விளையாடி விட்டு போவான். அவனை பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும். திடீரென்று ஒரு நாள் அந்த சிறுவன் வரவில்லை. மரமும் அவனை எதிர் பாத்து காத்திருந்தது. சில நாள் கழித்து அந்த சிறுவன் வந்தான் .அந்த மரம் சந்தோஷத்துடன் அவனை பார்த்து ஏன் இவ்வளவு நாள் வரவில்லை? உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டது.

அதற்கு அவன் சொன்னான். என் நண்பர்கள் எல்லோரும் அழகழகாய் பொம்மைகள் வைத்திருக்கிறார்கள், ஆனால் என்னிடம் மட்டும் ஒன்றும் இல்லை, கடையில் வாங்கலாம் என்றாலும் கையில் காசில்லை என்றான்.

மரம் சொன்னது கவலைப்படாதே இந்த மரத்தில் உள்ள பழங்களை எடுத்துச்சென்று கடையில் விற்று அதில் பொம்மை வாங்கிக்கொள். என்னை பார்க்க அடிக்கடி வந்து கொண்டிரு என்று சொன்னது... அவனும் மகிழ்ச்சியுடன் மரத்தில் ஏறி பழங்களை பறித்து சென்றான்.

மறுபடியும் அவன் பல நாள் வரவில்லை. வாரங்கள், மாதங்கள் ஓடின அவன் வரவேயில்லை. மரம் அவனுக்காக ஏங்கியது. பல வருடம் கழித்து அவன் ஒரு நாள் வந்தான். அவன் முகத்தில் கவலை தெரிந்தது, இப்போது அவன் வளர்ந்திருந்தான். அவனை பார்த்ததும் மரத்துக்கு ஏக சந்தோஷம். வா என்னிடம் விளையாடு இந்த கிளையில் ஏறி அமர்ந்து பாட்டு பாடு என்றது.

அதற்கு அவன் சொன்னான், இல்லை எனக்கு இப்பொது வயதாகி விட்டது, எனக்கு மனைவி குழந்தைகள் உள்ளனர், ஆனால் நாங்கள் வசிக்க சொந்தமாக நல்ல வீடு இல்லை, வீடு வாங்க என்னிடம் பணமில்லை என்றான்.  மரம் உடனே சொன்னது பரவாயில்லை உனக்கு கொடுக்க என்னிடம் பணம் காசில்லை அதற்கு பதில் என்னுடைய கிளைகளை வெட்டி எடுத்துச்செல் அதில் ஒரு வீடு கட்டிக்கொள் என்றது.

அவனும் கோடாரியால் கிளைகளை வெட்டத் தொடங்கினான். அப்போது மரம் அவனிடம் இப்படி ஒரேயடியாக என்னை பார்க்காமல் இருக்காதே முடிந்த வரை வருடம் ஒரு முறையாவது வந்து என்னை பார்த்து செல் என்றது. அவனும் வேண்டிய கிளைகளை வெட்டி எடுத்துச்சென்றான். அதற்கு பின் பல வருடங்கள் அவன் வரவில்லை. அவன் வருவான் வருவான் என்று மரமும் நித்தமும் காத்திருந்தது. அதற்கு பின் பல வருடங்கள் கழித்து பார்க்க வந்தான்.
மரம் அவனை பார்த்து ஆனந்த கூத்தாடியது. அவன் எப்போதும் போல் சோகமாக இருந்தான். ஏன் இப்படி இருக்கிறாய் என்று மரம் கேட்டது. அவன் சொன்னான் என் மீன் பிடி படகு உளுத்து விட்டது, படகு இல்லாத்தால் மீன் பிடிக்க முடியவில்லை, அதனால் வருமானம் இல்லை நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம் என்றான்.
மரம் துடித்து போனது, நான் இருக்கிறேன். என்னுடைய அடி மரத்தை வெட்டி எடுத்துக்கொள், இதை வைத்து நீ பெரிய படகு கட்டிக்கொள் என்றது. அவன் அடி மரத்தை வெட்டும் போது மறக்காதே வருடத்திற்கு ஒரு முறை என்றில்லாமல் எப்போதாவது என்னை பார்க்க வா என்றது.

ஆனால் பல வருடங்கள் அவன் வரவேயில்லை. மரத்துக்கு நம்பிக்கை மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தது. அப்போது அவன் வந்தான். தலையெல்லாம் நரைத்து கூன் விழுந்து மிகவும் வயதான தோற்றத்துடன் அவன் இருந்தான். அவனை பார்த்து மரத்துக்கு அழுகையே வந்து விட்டது.

இப்போது உனக்கு கொடுக்க என்னிடம் பழங்கள் இல்லை கிளைகள் இல்லை அடி மரமும் இல்லை உனக்கு கொடுக்க ஒன்றுமே இல்லையே என வருந்தியது.

அவன் சொன்னான் நீ பழங்கள் கொடுத்தாலும் அதை கடிக்க எனக்கு பற்கள் இல்லை, வீடு கட்டவும் படகு செய்யவும் என்னிடம் சக்தி இல்லை. எனக்கு இப்போது ஓய்வு மட்டுமே தேவைப்படுகிறது என்றான்.
அப்படியா இதோ தரையில் கிடக்கும் என் வேர்களில் படுத்துக்கொள் என்றது. அவனும் அந்த வேர்களில் தலை வைத்து படுத்துக்கொண்டான். இந்த சுகத்துக்குதான் அந்த மரம் பல வருடங்கள் ஏங்கி தவித்தது. இப்போது அந்த ஏக்கம் நிறைவேறியது, அந்த மரம் ஆனந்த கண்ணீர் விட்டது.

இது மரத்தின் கதையல்ல நிஜமான நம் பெற்றோர்களின் கதை, இந்த சிறுவனை போல் நாமும் சிறு வயதில் தாய் தந்தையோடு விளையாடுகின்றோம் வளர்ந்து பெரியவனானதும் தமக்கென்று குடும்பம், குழந்தை என்று ஒதுங்கி விடுகின்றோம். அதன் பின் ஏதாவது தேவை அல்லது பிரச்சனை என்றால் தான் அவர்களை தேடி போகின்றோம். நம்மிடம் இருப்பவை எல்லாம் அவர்கள் கொடுத்தது என்பதை புரிந்து கொள்ளுங்கள். நம்மால் அவர்களுக்கு எதுவும் கொடுக்க முடியாது, நம்முடைய பாசம், அன்பு, நேரம் தவிர. அவர்கள் விரும்புவதும் அது தான். அதை கூடவா நம்மால் தர முடியாது??????????.    -----  படித்ததில் பிடித்தது -

அலைபேசி எண் தெரியாமல் நண்பரிடம் பேச வேண்டுமா...!

அலைபேசி எண் தெரியாமல் தெரியாமல் நண்பரிடம்  பேச வேண்டுமா...!




உங்களுடைய நண்பருக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசலாம். உங்களது அலைபேசி எண் தெரியாமல் அதாவது நீங்கள் தொடர்பு கொள்ளும் நபருக்கு யாருடைய எண் என தெரியாது . அதுவும் இலவசமாகஎப்படி என்கிறிர்களா?https://ievaphone.com/ என்ற இணைய தளத்தில் இருந்து தொடர்பு கொள்ளலாம். பதிவு செய்ய வேணாம்(NO REGISTRATION)..ஆண்ட்ராய்டு மென்பொருளும் பயன்படுத்திக் கொள்ளலாம்.country code உடன் மொபைல் எண்ணை பயன்படுத்தலாம். உதாரணமாக இந்தியாவிற்கு +91  மொபைல் (country code + mobile no ) என்னை கொடுத்து கால் செய்து பாருங்கள்..

ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரை பயன்படுத்தியதால் புற்று நோய்

ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரை பயன்படுத்தியதால் புற்று நோய்: ரூ.493 கோடி நஷ்ட ஈடு வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

அமெரிக்காவில் உள்ள மிசவுரி மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜாக்குலின் பாக்ஸ் (வயது 62) இவர் கடந்த 35 ஆண்டுகளாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான பவுடரையும், ஷவர் டூ ஷவர் பவுடரையும் பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் அவருக்கு கர்பப்பை புற்றுநோய் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் ஜாக்குலின் பாக்ஸ் இறந்தார்.

ஜான்சன் - ஜான்சன் நிறுவனத்தின் பொருள்களைப் பயன்படுத்தியதாலே அவருக்கு கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்பட்டதாக கூறிய அவரது குடும்பத்தினர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜான்சன்-ஜான்சன் நிறுவனம் அதனுடைய உற்பத்தி பொருளான முகப்பவுடரில் புற்று நோயை ஏற்படுத்தக்கூடிய ரசாயன பொருட்கள் இருப்பதை நுகர்வோருக்கு தெரிவிக்க தவறிவிட்டது என தெரிவித்தனர்.

மேலும், பாதிக்கப்பட்ட ஜாக்குலின் குடும்பத்தாருக்கு, 72 மில்லியன் அமெரிக்க டாலர் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டனர். இதன் இந்திய மதிப்பு ரூ. 493.50 கோடி ஆகும். இது சம்பந்தமான சுமார் 1000 வழக்குகள் மிசவுரி மாநில நீதிமன்றத்திலும், சுமார் 200 வழக்குகள் நியூஜெர்ஸி கோர்ட்டிலும் நிலுவையில் உள்ளன.

ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் பவுடர்களில் 'டால்கம்' பயன்படுத்தப்படுகிறது. இந்த டால்கம் பொருளால் புற்றுநோய் ஏற்படுகிறது என தெரியவந்ததையடுத்து, அமெரிக்காவில் பெரும்பாலான அழகுசாதனப் பொருள்களை தயாரிக்கும் நிறுவனங்கள் டால்கம் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டன. எனினும், ஜான்சன் - ஜான்சன் நிறுவனம் தொடர்ந்து டால்கமை பயன்படுத்தி வந்துள்ளது. இந்நிலையில், ஜான்சன் - ஜான்சன் பவுடரை பயன்படுத்த இந்திய பெண்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.

139 கால் பண்ணுங்க! ரயில் டிக்கெட் கேன்சல் பண்ணுங்க :

139 கால் பண்ணுங்க! ரயில் டிக்கெட் கேன்சல் பண்ணுங்க : புதிய வசதி அறிமுகம்


ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்கள், தேவையில்லை என்றால் தங்கள் மொபைல் மூலமே அதை ரத்து செய்யலாம் என்று புதிய வசதியை ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
salemtamil.blogspot.com
 
 
இதற்கு முன்பு ரயிலில் பயணம் செய்தவர்கள், அதை ரத்து செய்ய விரும்பினால் ரயில் நிலையங்களுக்கு செல்ல வேண்டும். அல்லது இணையதளத்தில் ரத்து செய்யவேண்டும்.
 
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வசதிபடி, உங்கள் பயணத்தை ரத்து செய்வதற்கு உங்கள் மொபைலில் இருந்து 139 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால், உங்களுக்கு ஒருமுறை பயன்படுத்தக் கூடிய ஒரு கடவுச்சொல்(பாஸ்வேர்டு) அளிக்கப்படும். அதை பயன்படுத்தி நீங்கள் உங்கள் டிக்கெட்டை ரத்து செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்நீச்சல்...!

salemtamil.blogspot.in

ஒவ்வொரு முறையும்

எதிர்நீச்சல் போடுவதாக

நினைத்து கொண்டு

முயல்கிறேன்....!

 
கரையைத்தொடும்

முயற்சியில்

தோற்றுப்போகும்

கடல் அலைகள்போல......!

 சி.பி.வெங்கட்

ஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!!

ஆண்களுக்கும்.. பிரச்சினை
இருக்குங்க..!!

1, ஒரு ஆண் கடுமையா உழைச்சா.. பொண்டாடியை
கண்டுக்கமாட்றான்'னு.. மட்டம் தட்டுவாங்க..!!

2, பொண்டாடியை கவனிச்சுக்கிட்ட  ா.. அவளையே சுத்தி வாரான்..
பொண்டாட்டி தாசன்'னு கட்டம் கட்டுவாங்க..!!


3, அது போகட்டும்.. ஒரு பொண்ணை பார்த்து.. அழகா
இருக்கே'னு சொன்னா.. அது ஈவ் டீசிங்..ன்னு கெளப்பி விடுறாங்க..!!
 

4, கண்டுக்காம போன.. அழகை ரசிக்க தெரியாத ஜடம்..ன்னு
அமுக்கி வைப்பாங்க..!! 

5, ஏதாச்சும் அழுதோம்..ன்னா பொம்பள மாதிரி அழறான் பாரு'னு
சொல்லுவாங்க..!! 


6, திடமா இருந்தா.. நெஞ்சில ஈவு இறக்கம் இல்லாத அரக்கன்'னு
வாருவாங்க..!! 


7, பொண்டாடியை கேட்டு முடிவெடுத்தா.. தானா முடிவு
எடுக்க தெரியாத.. முட்டாள்'னு பட்டம் கட்டுவாங்க..!!


8, சரி'னு நாமளே ஒரு முடிவெடுத்தா.. ஆம்பளை'ங்கற
அதிகாரம்..ன்னு திட்டுறாங்க..!!


9, ஏதாவது பிடிச்சத வாங்கிட்டு போய் கொடுத்தா.. என்னத்துக்கு
இப்போ காக்கா பிடிக்கிறிங்க..? அப்படி'னு ஒரு நக்கல்..!!


10, ஒன்னுமே வாங்கிட்டு போகலை'னா.. ஒரு முழம்
பூவு'க்கு கூட.. நான் விதியத்து போய்டேனா..ன்னு மூக்கை
சிந்திட்டு.. விக்கல் வேற..!!


11, ஒரு குறிக்கோளோடு உழைச்சா.. வேலையை
கட்டிக்கிட்டு.. மாரடிக்க வேண்டியது தானே.. எதுக்கு
உங்களுக்கு பொண்டாட்டி.. ன்னு
ஒரு ஏசல்..!!


12, சரி'ன்னு சினிமாவுக்கு அழைச்சிட்டு போனா.. அந்த
ஹீரோ மாதிரி ஒரு லட்சியம் வேணும்'ங்க.. எப்படி உழைச்சி
முன்னேறி.. கார் பங்களா வாங்கி இருக்கான்.. பாத்தீங்களா..? ன்னு..
ஒரு பூசல்..!!


13, இதையெல்லாம் கேட்டு.. சகிப்பு தன்மை வந்து..
வாழ்க்கையே வெறுத்து.. தற்கொலை செய்து
கொள்ளலாம்'னு முடிவெடுத்தா.. இத பாரு.. வாழ்வதற்கு பயந்து
கொண்டு.. தற்கொலை செய்ய பாக்குறான்.. பயந்தா கொள்ளி பய..
ன்னு சொல்லுவாங்க..!!


14, சரி'ன்னு இது போல.. பூசல்களை கேட்டும் கேக்காமல்
தன் வழியே ஒரு ஆண் நடந்து போனா.. இதப் பாரு நாம பேசுற
பேச்சுக்கு.. இதே வேற எவனா இருந்தா தூக்குல தொங்குவான்..
இவன் ஒரு மானாங்கெட்ட பய..ன்னு சொல்லுவாங்க..!!
அன்பு நண்பர்களே...


இத பார்த்து நல்லா இருக்கு'னு எழுதினா.. ஆண் ஆதிக்க உலகம்
அப்படி'னு சொல்லுவாங்க..!! 


இது தப்பு பெண்கள் நல்லவர்கள்'னு எழுதினா.. உலகம்
தெரியாத பைத்தியகாரன்..ன ்னு
சொல்லுவாங்க..!!


பொதுவா ஆண்களுக்கு பிரச்சினை.. இருந்து கொண்டே
தான் இருக்கு..!!

மின் கட்டணம் கணக்கிடும் முறை நாம் தெரிந்து கொள்ளவேண்டிய ஓன்று !!

மின் கட்டணம் கணக்கிடும் முறை நாம் தெரிந்து கொள்ளவேண்டிய ஓன்று !!


வீட்டு இணைப்புகளுக்கானது:-

முதல் நிலை:-

1-100 யூனிட் வரை ரூபாய் 1.00, நிலைக்கட்டணம் இல்லை.
(நீங்கள் 100 யூனிட்டுக்குள் எவ்வளவு உபயோகித்தாலும்
ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாய் மட்டும் தான். கூடுதலாக
எந்த கட்டணமும் இல்லை.)

இரண்டாம் நிலை:-

1-200 யூனிட் வரை ரூபாய் 1.50. நிலைக்கட்டணம் ரூபாய் 20.00.
 (நீங்கள் 100 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும்
சமயம் இந்த இரண்டாம் நிலைக்கு வந்துவிடுவீர்கள்.
நீங்கள் 110 யூனிட் உபயோகித்தால் உங்களுக்கான
தொகை 165.00 + நிலைக்கட்டணம் ரூ.20.00 ஆகமொத்தம்
ரூபாய் 185.00 செலுத்தவேண்டும்.)

மூன்றாம் நிலை:-

1-200 யூனிட் வரை ரூபாய் 2.00.
201-500 யூனிட் வரை ரூபாய் 3.00.
நிலைக்கட்டணம் ரூபாய் 30.00. (நீங்கள் 200 யூனிட்டுக்கு மேல்
உபயோகிக்கும் சமயம் இந்த மூன்றாம் நிலைக்கு வந்துவிடுவீர்கள்.
நீங்கள் 210 யூனிட் உபயோகித்தால் உங்களுக்கான தொகை 200 யூனிட்
வரை 400.00+ 10 யூனிட்டுக்கு 3.00 வீதம் 30.00+ கூடுதல் கட்டணம் ரூ,30.00 ஆகமொத்தம்  ரூபாய் 460.00 செலுத்தவேண்டும்.)

நான்காம் நிலை:-

1-200 யூனிட் வரை ரூபாய் 3.00.
201-500 யூனிட் வரை ரூபாய் 4.00.
500 க்கு மேல் ரூபாய் 5.75
நிலைக்கட்டணம் ரூபாய் 40.00

(நீங்கள் 500 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் சமயம்
இந்த நான்காம் நிலைக்கு வந்துவிடுவீர்கள். நீங்கள் 510 யூனிட் உபயோகித்தால் முதல் 200 யூனிட்டுக்கு 600.00+ அடுத்த 300 யூனிட்டுக்கு 4 ரூபாய் வீதம் 1200.00+ 10
யூனிட்டுக்கு 5.75 வீதம் ரூபாய் 57.50+கூடுதல் கட்டணம் ரூபாய் 40.00 ஆகமொத்தம் ரூ.1898.00 நீங்கள்
செலுத்தவேண்டும்)

அனைவரும் அறிய பகிருங்கள் நண்பர்களே..BY TNEB
============================================
 நன்றி குருஜி..

உலகின் விலை குறைந்த ஸ்மார்ட் போன்.



உலகின் விலை குறைந்த ஸ்மார்ட் போன்:
RINGING BELLS என்ற இந்திய நிறுவனம், ரூ.251 க்கு இந்த SMART  போனை அறிமுகம்.இந்த ஸ்மார்ட்போனுக்கு "ப்ரீடம் 251" என பெயரிடப்பட்டுள்ளது. இந்த குறைந்த விலை ஸ்மார்ட் போனை www.freedom251.com என்ற இணையதளத்தின் மூலம் பெறலாம்.
ப்ரீடம் 251 ல் சிறப் :
DISPLAY: 960x540 பிக்செல் திறன் கொண்ட 4 இன்ச் திரை.
MEMORY: 1GB RAM, 8GB INTERNAL MEMORY, 32 GB EXPANDABLE .
CAMERA: 3.2 MP . 0.3 FRONT CAMERA.
BATTERY: 1450 எம் ஏஹச் பேட்டரி.
* ஒரு வருட உத்தரவாதம். இதில் குறைபாடுகள் ஏற்பட்டால் சரி செய்வதற்காக நாடு முழுவதும் 650 சேவை மையங்களை ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் அமைக்க உள்ளது.

எனது கிறுக்கல்கள்..........